March 30, 2011

அர்ச்சனை - 7 சிக்கனமும் தலைக்கனமும்!

சமையலறை வேலைகளை முடித்து விட்டு, விளக்குகளை அணைத்து விட்டு, மாடி பெட்ரூமுக்குள் நுழைந்த அம்புஜம், தன் கையிலிருந்த மின்சார பில்லை படுக்கையில் படுத்துக் கொண்டு மர்ம நாவலைப் படித்துக் கொண்டிருந்த பஞ்சுவின் பக்கமாகத் தூக்கிப் போட்டாள்.
``கொஞ்சம் கடைக்கண்ணை இப்படித் திருப்பி, ’என்னடா ஏதோ பேப்பர் போட்டாளே’ என்று பார்த்தால் குடி முழுகிப் போய் விடாது. அந்த இலக்கியப் புத்தகத்தை கீழே வெச்சால் தெய்வக் குற்றம் இல்லை. போகிறதே புத்தி, பத்து ரூபாய் கொடுத்து `பல்லாவரம் பங்களா மர்மம்' நாவலை வாங்கிப் படிக்கா விட்டால் தப்பில்லை. நாளைக்கு உங்க ஆபீஸ் மானேஜர் உங்க தலையை வாங்க மாட்டார்.
தெருக்கோடி பழைய பேப்பர்க்காரன்  இந்த மாதிரி குப்பை நாவல்களை கடையில் அடுக்கி வெச்சிருக்கான். பத்து பைசா பெறாத புஸ்தகத்திற்கு பத்து ரூபாய்! அட்டையில் அழகி படம் போட்டிருந்தால் வாங்கிடுவீங்க. மதுரையில் ஒரு கள்ளழகர். இங்கே ஒரு ஜொள்ளழகர்!
போகட்டும்... அது என்ன பேப்பர் என்று பார்த்தீங்களா? ஆமாம்... மின்சார பில். எடுத்துப் பாருங்க... ஷாக் அடிக்காது.

அலட்டல் விமர்சனங்கள்

இலக்கியப் பத்திரிகைகளிலும் சரி ஒரு சில விமரிசனங்களிலும் சரி,  விமரிசகர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்வது கடினம். தங்கள் கெட்டிக்காரத்தனத்தை காட்டும் HIGH BROW  கட்டுரைகளாகத்தான் இவை எழுதப்படுகின்றன.

எழுபதுகளில் பிரிட்டிஷ் பத்திரிகைகளில் வந்த இத்தகைய அலட்டல்களை டயரியில் நான் குறித்து வைத்துக்கொள்வது உண்டு. அதிலிருந்து சிலவற்றை இங்கு தருகிறேன்.
* Food is a complicated subject which doesn't begin or end with the meal on the dinner table; it's a fabric of moods, responses and encounters, a fascinating blend of pleasures, problems and disasters.
* Fassbinders's plays are not sociograms but phlegmatic situational evocations.
*  The films structure is simple and linear, its varied resonances complex even mystical.
* Peter De Vries wields a cool, down-beat, deadpan humour which is  unorthodox as quantum theory, as elusive as avocado pear, as a improbably piercing as a left-handed screw. - Penguin Books
*  Thomas hardy and British poetry raise confusion to the level of criticism: it is a testament to Britain's fertility as an intellectual acerage in which ideas will flourish as  rigour's expense, the insights blooming like orchids while the valid syllogisms wither  on the vine - TLS
*  " Your own special way" a captivating love song explored an unusual variety of textures and rhythms, while "... in that quiet earth" used wide ranging melismas accompanied by keyboard and guitar ostinato figures to create a curious but presumable intentional air of eventlessness about much of it--  Clive Bennett  in " The times"
*  There is something, perhaps about a photograph, which pierces the protection behind which an individual contemplates what is nasty and terrifying. It has a singleness of purpose, a documentary quality and an inescapable contemporaneity.
- New Society.

*  We have in these poems a venture into modes of sensibility and compassion which will play their limited yet crucial note in the re-fructifying of Society itself.
- Terry Eagleton

 போதுமா? இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா? இவைகளுக்குக் கோனார் நோட்ஸ் போடப்படவில்லை!

( இதைப் படித்த சூட்டோடு, தாளிப்பு கட்டுரைகளைப் படித்தால் ஆஹா, ஓஹோ என்று  தலைமேல்  வைத்துக் கொண்டாடுவீர்கள்!)

March 24, 2011

நான் ஒரு ஐயோ பாவம்!


      சமீபத்தில் சென்னையில் கண் நோய் பரவிப் பிரபலமடைந்தது.  அவரவர்
கண்களைக் கசக்கிக்கொண்டு,  ", , ' என்று உயிர் எழுத்துக்களிலேயே அங்கலாய்த்துக் கொண்டார்கள்.  ஆனால் அந்த "மெட்ராஸ் ' அடியேனை அணுகவில்லை.  இதை எண்ணி நான் இன்றும் வருத்தப்படுகிறேன்.
      இதில் வருத்தப்படுவதறக்கு என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்காவிட்டாலும் நான் பதில் கூறத்தான் போகிறேன்.
*      பாருங்களேன்ஆபீசுக்குப் போகிறேன்.  மொத்தம் நாலு குமாஸ்தாக்களில் மூன்று பேர் லீவு போட்டிருந்தார்கள்.  மானேஜர் வந்தார்.  ""என்னய்யா உனக்குக் கண் நோய் எதுவும் வரவில்லையா? அவர்கள் மூணு பேருக்கும் "மெட்ராஸ் ' வந்து விட்டிருக்கிறது'' என்றார்.  மற்றவர்களோடு ஒத்துப் போகாது தனியாகப் புரட்சி செய்கிற சமூக விரோதி மாதிரி என்னை அவர் கருதியிருக்க வேண்டும்!
      "இல்லை சார். . . நான் தினமும் காலையில் வெந்நீரால் கண்ணை அலம்பிக் கொண்டிருக்கிறேன்.  அதனால். . .''
      ""அதனால் என்னய்யா? நாங்கள் மட்டும் சும்மாவா இருக்கிறோம்? என் மிஸஸ÷க்கு இரண்டு நாளாக வலி'' என்றார்.
      ""எப்படியாவது நாளைக்குள் கண் நோயை வரவழைத்துக் கொள்கிறேன்'' என்று நான் சொல்லி இருந்தால் அவருக்குத் திருப்தி ஏற்பட்டிருக்கும்!
*      "அடபாவி! உனக்குக் கண் நோவே வரவில்லையா?. மூன்றாம் வருஷம் ஏஷியன் ஃப்ளு வந்தது.  அப்பவும் உனக்கு ஒண்ணும் வரவில்லை. ஏன், பத்து வருஷத்துக்கு முன்னே டெங்கு ஜுரம், சபதம் இட்ட திரௌபதி மாதிரி தலை விரித்து ஆடியது. அப்பவும் உனக்கு ஒரு மண்ணும் வரவில்லை. உன் உடம்பிலே ஏதோ கோளாறு இருக்கிறது''  என்று முடித்தான் சக ஊழியன் திருமலை, கண்களைக் கசக்கிக் கொண்டே!
      ""போகட்டுமடா. .மெட்ராஸ் ஐ உனக்கு வந்தால் என்கிட்டே வா.  நல்ல ஹோமியோபதி மருந்து தரேன்.”
*     இதே மாதிரி இன்னொரு நோவுக்கார நண்பன், "லேசாகக் கண் நோவு வந்த உடனே சொல்லு. ஒரு ஏ ஒன் பாட்டி வைத்தியம் வைத்திருக்கிறேன்'' என்றான்..
      கடைசியில் நோவு எனக்கு வரவேயில்லை.  அவர்களின் ஆலோசனையை நான் கேட்க வாய்ப்பே இல்லை. இருந்தும், "அவன் பெரிய  மனுஷன். நாம் சொல்வதை எல்லாம் ஏற்பானா?'' என்கிற மாதிரி கறுவினார்கள்.

March 16, 2011

அர்ச்சனை - 6 வீ டா, தர்மசத்திரமா? - கடுகு

என்னது படிக்கறீங்க? டிராமா நோட் புத்தகமா? இல்லை ஆபீஸ் வேலையா..? ஆபீஸ் நோட் புத்தகத்துக்குள்ள டிராமா நோட்டாக இருக்கும். முறைக்காதீங்க... காலைல போய் அர்த்த ராத்திரி திருடன் மாதிரி வர்றீங்க... நேபாளி கூர்க்கா மாதிரி நான் கொட்டு கொட்டுன்னு முழிச்சிண்டு கவலைப்பட்டுண்டு உட்கார்ந்திண்டு இருக்கேன்...
மத்தியானம் ஊரிலிருந்து வந்து கதவைத் திறக்கறேன். குப்புன்னு வாசனை தூக்கி அடிக்கிறது. ஆமாம்... சந்தனம், மல்லிகை, மருக்கொழுந்து வாசனைதான் பாக்கி.... கேட்கறீங்களே வெட்கமில்லாமல்... திருட்டுத்தனம் பண்ணவும் சாமர்த்தியம் வேணும்.
நான் ஊரில் இல்லாத போது இங்கே அடிச்ச கொட்டம் எனக்குத் தெரிஞ்சுடுத்து. தோட்டத்தில புதருக்குள் போட்டு மறைச்சுட்டால் ஆகிவிட்டதா? சிகரெட்டால் ஹோமம் பண்ணின மாதிரி இருக்கு... எவ்வளவு துண்டுகள்! பேப்பர் பிளேட் மட்டும் 20, 30 இருக்கும்.
என்ன விசேஷம்... பார்ட்டியா? எத்தனை பெண்கள் வந்தார்கள்... நீங்க சொல்லாவிட்டால் என்னால் கண்டுபிடிக்க முடியாதா? பக்கத்து வீட்டு சித்ராங்கிதான் இருக்காளே... இந்த மாதிரி விஷயங்களை மசாலா போட்டுச் சொல்வதற்கு..? என்னது... பத்து பேரா? சீமந்தம், வளைகாப்பு நிகழ்ச்சியா? என்னது... பர்த்டே பார்ட்டியா? இது என்ன கல்யாண மண்டபமா, சமுதாயநலக் கூடமா, தியான மண்டபமா, குத்துப்பாட்டு பாசறையா? யாருக்கு பர்த்டே? உங்களுக்குன்னு சொல்லிக் கூட பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருப்பீங்க... நான் வீட்லே இல்லைன்னா உங்க சில்மிஷ புத்திக்கு ஆயிரம் குயுக்தி யோசனை வருமே...

March 11, 2011

அர்ச்சனை-5 ஜாமீன் கொடுத்த ஜமீன்தார்? -கடுகு

அம்புஜம் படுக்கை அறைக்குள் நுழைந்த போது, பஞ்சு படுக்கையை தட்டிப் போட்டுக் கொண்டிருந்தார். இரண்டு நிமிஷம் தான் வந்ததை அவர் கவனிக்கிறாரா என்று இரண்டு நிமிஷம் பார்த்த அம்புஜம், பஞ்சுவைப் பார்த்துச் சொன்னாள். ``இப்ப சொல்லுங்க... பசங்க அவங்க அவங்க ரூமில் பரீட்சைக்குப் படிக்கப் போய்ட்டாங்க. என்னது? சொல்றதுக்கு ஒண்ணுமில்லையா? நிச்சயமா ஒன்றுமேயில்லையா? ஆபீசிலிருந்து வீட்டுக்கு வந்ததிலிருந்து திருட்டு முழி முழிச்சுண்டு, மசமசன்னு சுத்தி வந்துண்டு இருந்தீங்க... பசங்க எதிரே பேசவேண்டாம்னு இருக்கீங்கன்னு நெனைச்சேன். ஒண்ணுமே இல்லைன்னா அந்த முழி முழிச்சதுக்கு என்ன காரணம்? வழக்கமான உங்க பரம்பரை முழி எனக்குத் தெரியும். இன்னிக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா முழியாக இருந்ததே!

நான்தானே? வாயை மூடறேன். என் வாயை மூட முடியும். ஊர் வாயை எப்படி மூட முடியும்? எனக்கு எல்லாம் தெரியும்... ஆமாம். எல்லாம் தெரியும்.
என்னது? எல்லாம் தெரிஞ்சே ஏன் என்னைக் கேக்கறேன்னு கேக்கறீங்களா? எவ்வளவு தூரம் உண்மையைச் சொல்றீங்கன்னு தெரிஞ்சிக்கிறதுக்காகத் தான்!
அது எப்பேர்ப்பட்ட சிதம்பர ரகசியமாக இருந்தாலும் சொல்லலாம். ஏன், பக்கத்து வீட்டு அழகி சித்ராங்கியின் வீட்டுக்காரர் சிதம்பரத்தைப் பற்றிய ரகசியமாக இருந்தாலும்... என்ன முறைக்கறீங்க? பாயின்டைப் பிடிச்சுட்டேனா? சரி... வேற வழியில்லை... சலிச்சுக்காம ஆரம்பியுங்க.

March 06, 2011

பையச் சென்றது பன்றி

தெளிவற்ற நிலையில் நான் இருந்த தருணம்,
சுமையேற்றிய ஆண் திமிரில் வீடு திரும்பும் நேரம்,
எனது கால்கள் நிலையற்ற நடனம் ஆட,
மோன நிலையில் சாக்கடையில் கிடக்க,
அப்பக்கம் வந்த வராகம் என் அருகில் கண்ணசர,
போகிற போக்கில் அப்பெண் கூறினாள்,
“கூட்டாளிகளை வைத்தே கூறிடலாம்,
ஒருவன் குடிகாரனா என்பதெல்லாம்”
“ஹும்” என பெருமூச்சுடன் அங்கிருந்து பையச் சென்றது பன்றி.

- Judged by the company  என்ற ஆங்கிலப் பாடல்.
தமிழாக்கம்: டோண்டு ராகவன்  அவர்கள் .

( டோ.ரா.விற்கு நன்றி- கடுகு)

March 05, 2011

எம்.எல்.ஏ. ஏகாம்பரம் --கடுகு


*``தொகுதிப் பக்கமே வருவதில்லைன்னு குற்றம் சாட்டறாங்க. போன வருஷம் தொகுதியில் காலரா. அதற்கு முன்னே ஆறு மாசத்துக்கு முந்தி டெங்கு ஜுரம் பரவி இருந்தது. கொசுத்தொல்லை சமாளிக்க முடியலை. சுத்தமான குடிதண்ணீர் இல்லை. இப்படியிருக்கும் போது எப்படிய்யா  போக முடியும்?''

*``அரசியலில் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள், `இவன் மாறாத கட்சி இல்லை' என்று என்னைப் பார்த்து ஏகடியம் பேசுகிறார்கள். லேபர் பார்ட்டி, டெமோக்ராட்ஸ் பார்ட்டி, டோரி பார்ட்டி போன்ற கட்சிகளில் எப்போதாவது சேர்ந்திருகிறேனா?''

*மாவட்டச் செயலாளர்: தொகுதி மக்கள் நிதி திரட்டி கார் வாங்கிக் கொடுக்கறதா இருக்காங்களாம்...''
ஏகாம்பரம்: ``அதுக்குப் பதிலா ஒரு ஆம்புன்ஸ் வாங்கிக் கொடுத்தா கோர்ட்டுக்குப் போய்வர வசதியா இருக்கும்.''

*``தொகுதி மக்களுக்காகச் செலவிட அரசு கொடுத்த பணத்தை என் மனைவி பிள்ளைகளுக்காகச் செலவிட்டு விட்டேன் என்று கூறுகிறாயே. என் மனைவி, மகன்கள் என்ற காரணத்தால் அவர்கள் தொகுதி மக்களாக இல்லாமல் போய் விடுவார்களா? இதுகூடவா உன் மரமண்டைக்குத் தெரியாது?''

*``அசெம்பிளியில் நான் பேசவில்லை என்று விவரம் புரியாமல்  குற்றம் சாட்டுகின்றனர் சிலர்! எம்.எல்.ஏ. சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று குரல் கொடுத்தவன் நான்தான். அலவன்ஸ் அதிகரிப்புக்கு முழங்கியவனும் நானே. இலவச பாஸ், டெலிபோன் என்று எத்தனையோ தடவை பேசி இருக்கிறேன்.''


*ஏகாம்பரம்:  டேய். உன்னோட அப்பாங்கற முறையில சொல்றேன், அரசியல்ல நீ நுழையறதைப் பத்தி சந்தோஷம்தான். ஒண்ணு மட்டும் நீ மறக்கக் கூடாது. நீ எது வேணாலும் செய். அதுக்கு முன்ஜாமீன் கிடைக்குமான்னு முதல்ல
நிச்சயப்படுத்திக்கோ. அப்புறம் செய்!''

*
ஏகாம்பரம்: டாக்டர்... இந்த நெஞ்சு வலி மூணு மாசம் கழிச்சு வந்தா நல்லா இருக்கும்.
டாக்டர்: அதென்ன மூணு மாசம் கணக்கு?
ஏகாம்பரம்: முன்ஜாமீன் கெடு 3 மாசத்தில முடிஞ்சிடறது.
*
``ஒரு பொதுத் தேர்தல்னா எவ்வளவு செலவாகிறது? இந்தச் செலவை நம் மக்கள்தான் சுமக்க வேண்டியிருக்கிறது. அதனால் ஒரு தரம் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் அவர் பத்து வருஷம் எம்.எல்.ஏ. என்று வைத்து விடலாம்.''
*
``குற்றப்பத்திரிகை ஆயிரம் பக்கம் கொடுத்திருக்காங்க. அதைப் படிச்சுக் காட்ட கோர்ட் ஏற்பாடு பண்ண வேண்டாமா? வகுப்பில் பின்தங்கியவன் என்பதால் என்னை இப்படி இன்சல்ட் செய்கிறார்களா?''

*
``தாலுகா ஆபீஸ் போகிறீர்கள். டீ செலவுக்கு பத்து ரூபாய் பியூனுக்குக் கொடுக்கிறீர்கள். அதன் பெயர் லஞ்சமா? அதே மாதிரிதான் தொண்டனான நான் ஐந்து லட்சம் இனாம் வாங்கினால் லஞ்சமா? அரசியலில் 64 கோடி, 133 கோடி என கோடிக் கணக்கில் பணம் புரளும் போது ஐந்து லட்சம் என்பது ஒரு பிசாத்துத் தொகை!''

Judged by the company

One night in late October, 
When I was far from sober,
Returning with my load with manly pride,
My feet began to stutter,
So I lay down in a gutter,
And a pig came near and lay down by my side;
A lady passing by was heard to say:
"You can tell a man who boozes,
By the company he chooses,"
And then pig got up and slowly walked away.
                                -Author Unknown