July 25, 2011

தொடுத்த மலர்கள்.

நான் வார்த்தைகளின் காதலன்.  அழகான கருத்துகளை அழகான  முறையில் அழகான   வார்த்தைகளைக் கொண்டு தொடுக்கப்படும்  கவிதைகளையும்  பொன்மொழிகளையும் படிக்க எனக்கு ஆர்வம் உண்டு.. தமிழ், ஆங்கில பாடல்களிலும்  இலக்கியங்களிலும்   உள்ள அழகை ரசிப்பவன். பலவற்றைப் பல நோட்டுப் புத்தகங்களில் எழுதிக் கொள்வேன். சமீபத்தில் ஒரு  புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு அழகான பொன்மொழி கண்ணில் பட்டது:

சுமார் 500 வருஷங்களுக்கு முன்பு,   பிரஞ்சு எழுத்தாளர் Montaigne எழுதியது. இவரது புத்தகங்கள் 75  மொழிகளில், மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளனவாம்.

அவர் எழுதிய  ஒரு அழகிய கருத்தைப் பாருங்கள்.

I have gathered a posie* of other men's flowers,
and nothing but the thread that binds them is my own.--Montaigne, 1533-1592

*a small bunch of flowers


 அடாட,என்ன நயம்! என்ன அடக்கம்!

*               *                        *           
தாளிப்பு என்ற பெயரை வைப்பதற்கு முன்னால்,  என் வலைப்பூவிற்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்தேன். ”படித்ததில் பிடித்தது”, ”பலசரக்கு”, ’அஞ்சறைப் பெட்டி”, ”சரடு”, ” தேங்காய்- மாங்காய்- பட்டாணி,-சுண்டல்”, ”கதம்பம்”, ”மஞ்சரி”, ”நான் நெய்தது” என்றெல்லாம்   யோசித்தேன் அப்போது இந்தக் கவிதையை  அப்போதுப் படித்திருக்கவில்லை. படித்திருந்தால் தொடுத்த மலர்கள் என்று பெயர் வைத்திருப்பேன்.

3 comments:

  1. இந்தக் கருத்தை தமிழில் மொழிபெயர்க்கும்போது இன்னும் அழகானதாகிவிடுகிறது.மலர்களைத் தொடுத்த 'நூல்' மட்டுமே என்னுடையது. ஆஹா...வண்ணமலர்களான உங்கள் முத்துச்சரம் போன்ற தாளிப்பு கூட்டாஞ்சோறாய் பரிமாறும் வரை எங்களைப் போன்றவர்களுக்கு கவலையில்லை...

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    ரசனை இருப்பதால் தேடித் தேடிப் படிக்கிறோம்.
    நன்றி ஐயா.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!