December 21, 2013

புத்தகங்களும் நானும்-1

புத்தகங்களும் நானும்
(பல பகுதிகளாக நிறைய எழுத உத்தேசம்.)

எனக்கு எப்போது புத்தகப் பைத்தியம் பிடித்தது என்பது தெரியாது. என் அப்பாவிற்குப் பலதரப்பட்ட புத்தகங்கள் மிது ஈடுபாடு உண்டு, இசை, மொழி, வான சாஸ்திரம்.  தெலுங்கு. சமஸ்கிருத புத்தகங்கள், நிகண்டு, நாலாயிரம் என்பவை மட்டுமல்ல, அந்த காலத்தில் TIMES OF INDIA-வின் ஹோம் லைப்ரரி கிளப்பில் சேர்ந்து  Worlds Best Short Stories  போன்ற பல தடிமனான புத்தகங்களையும், அமெரிக்காவிலிருந்து வெளியாகும்  POPULAR SCIENCE  போன்ற பத்திரிகைகளையும்  வரவழைத்தார்; இத்துடன் தியாகராஜர் கீர்த்தனைகள், திலகர் கீதை, அயினி அக்பரி என்று பலதரப்பட்ட புத்தகங்கள். அவற்றையெல்லாம் புரட்டிப் பார்ப்பேன். ‘
எதிர் வீட்டிலிருக்கும் என் நண்பன்  வெங்கடேசன் வீட்டில்.வடுவூர்  ‘திகம்பரசாமியார், ஜே. ஆர். ரங்கராஜு நாவல்கள் இருந்தன. அவைகளை கடன் வாங்கி விழுந்து விழுந்து படிப்பேன்.

விகடன், கல்கி வார இதழ்களைத் தேடித் தேடி படிப்பேன். தீபாவளியன்று விடிகாலையில் தீபாவளி மலர்களை படித்தால்தான் பண்டிகை முழுமையடையும்.
அதனால், பணத்தைச் சேர்த்து, செங்கற்பட்டு ரயில் நிலையத்திலிருந்த சுதேசமித்திரன் புக் ஸ்டால்’  நாராயணனிடம் முன்பணம் கட்டி விடுவேன். பாவம், நாராயணன், அவசரம் அவசரமாகத் தன் வீட்டில் தீபாவளியை கொண்டாடிவிட்டு, தீபாவளி மலரை வீடு வீடாகப் போய்ப் போடுவார். விடிகாலை ஐந்தாவது மணிக்குள் மலரை என் வீட்டிற்குக் கொண்டு வந்து கொடுத்து விடுவார்.
எனக்கு நாராயணன் மீது கொஞ்சம் பொறாமையும் உண்டு. எத்தனைப் புத்தகங்களுக்கு மத்தியில் அவருடைய பொழுது கழிகிறது! காசு செலவில்லாமல் அவர்  எல்லா பத்திரிகைகளையும் படிக்கலாம்.

அட்வான்ஸ் கொடுக்கும் சாக்கில் அவருடைய ஸ்டாலில் உள்ள தமிழ்ப் புத்தகங்களை மேய்வேன். சில சமயம் மாலை வேளைகளில் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் அவருடைய ஸ்டாலில் புத்தகங்களைப் புரட்டிப் பார்ப்பேன்.

என் பொறாமை வளையத்திற்குள் இருந்த மற்றொருவர் வாசு(?) என்பவர். வாசு எங்கள் ஊர்க்காரர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ஹிக்கின்பாதம்ஸ் புத்தக ஸ்டாலை நிர்வகித்து வந்தார். அது சற்று பெரிய ஸ்டால். பல மொழிப் பத்திரிகைகளும், வீக்லி, பிளிட்ஸ், காரவன். போன்ற பத்திரிகைகளும் இருக்கும். எனக்கு சென்ட்ரல் ஸ்டேஷன் போக வேண்டிய வேலை வந்தால், சற்று முன்னதாகப் போய்,  பத்து பதினைந்து நிமிஷம் ஸ்டாலில்  இருப்பேன்.

  சென்னை ஜி,பி. ஓ.வில் வேலைக்குச் சேர்ந்த பிறகு பீச் ஸ்டேஷனில் இருந்த சுதேசமித்திரன் புக் ஸ்டாலில் வாரம் ஒரு புத்தகமாவது வாங்கி விடுவேன். புலியூர் கேசிகனின் தமிழ் இலக்கிய புத்தகங்கள் (இரண்டு ரூபாய்தான்!), மர்ரே ராஜம் புத்தகங்கள் (ஒரு  ரூபாய்தான்!), சின்ன அண்ணாமலையின் தமிழ்ப் பண்ணை, அரு. ராமநாதனின் வெளியீடுகள், அமுத நிலையம் வெளியீடுகள் என்று வாங்கி விடுவேன். ( ஒரு ரூபாய் என்பதே அதிக விலைதான். சென்னை-செங்கல்பட்டு பஸ் கட்டணம் 75 பைசா என்று இருந்த காலம்!)

டில்லி வந்த பிறகு என் அலுவலகத்திலிருந்து மூன்றாவது கட்டடத்தில் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம் இருந்ததை பார்த்த எனக்கு லாட்டிரி பரிசு அடித்த மாதிரி மகிழ்ச்சி ஏற்பட்டது, சில வருஷங்கள் உறுப்பினர் சந்தா எதுவும் இல்லை. பிறகு 15 ரூபாய் என்று வைத்தார்கள்.
சுமார் பத்து நிமிஷ நடை தூரத்தில் சென்ட்ரல் செக்ரடேரியட் நூலகமும் இருந்தது. அது ஒரு சுரங்கம். . பல அரிய புத்தகங்கள், பழைய இதழ்கள் எல்லாம் மண்டிக் கிடந்தன. புத்தகங்கள் படிந்திருந்த தூசு. எல்லா புத்தகங்களையும் ‘கனமான’  புத்தகங்களாக ஆக்கி விட்டிருந்தன! அங்கிருந்து  ஒரு சமயம் இரண்டு புத்தகங்கள் தான் எடுத்து வரமுடியும்.

இந்த சமயத்தில் யாரோ ஒரு புண்ணியவான், “ ஞாயிற்றுக் கிழமைகளில் பழைய டில்லியில் இருக்கும் தாரியாகஞ்ச் தெருவிற்குப் போயிருக்கிறாயா? தெரு முழுதும் நடைபாதையில் பழைய புத்தகங்கள்தான்” என்றார். முதன் முதலில் போனபோது பிரமித்துப் போனேன்.  டில்லி கேட் எனப்படும் இடத்திலிருந்து துவங்கி ஜம்மா மசூதி வரை போகும்  வீதி. ஒரு பக்க நடைபாதையில் தான் கடைகள் இருக்கும். எதிர்ப்பக்கம் பரிதாபமாகக் காலியாக இருக்கும். 

December 06, 2013

மன்னிக்கவும்

என் கோடிக்கணக்கான வாசகர்களுக்கு ( ”என்னது, கோடியா?“ என்று கேட்பவர்கள், வேண்டுமானால் ஒன்று இரண்டு குறைத்துக் கொள்ளலாம்!).

தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த பதிவு மேலும் சில நாட்கள் தாமதமாகும். --கடுகு

November 17, 2013

புள்ளிகள்: சச்சின்........

பாரத ரத்னா சச்சின்
சச்சின் டெண்டுல்கர்  கொண்டாட்டத்தின் நம் பங்காக ”சச்சினும் நானும்” என்று ஒரு பதிவு எழுத எண்ணினேன்.  சச்சினை எனக்குத் தெரியாதது மட்டுமல்ல, கிரிக்கெட்டைப் பொருத்தவரை  நான் ஒரு பெர்னார்ட் ஷா. (எழுத்தைப் பொருத்தவரை அல்ல!) (கிரிக்கெட்டைப் பற்றி பெர்னார்ட் ஷா சொன்ன  ஒரு பொன்மொழி கிரிக்கெட்டை விடப் பிரபலம்,)
ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்.
’பூஸ்ட் ஈஸ் தி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி” என்று கபில்தேவ் கூறும் விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். 90-களில் அது பிரபலமான விளம்பரம்.
உலக கோப்பையை வென்றதும் இந்திய டீமின் காப்டன் கபில் தேவ் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். நான் பணியாற்றிக் கொண்டிருந்த நிறுவனம்தான் பூஸ்ட் விளம்பரத்தை  உருவாக்கியது.
சில வருஷங்களுக்குப் பிறகு,சிறுவர்களை வளைத்துப் போட புதிய பூஸ்ட் விளம்பரத்தைத் தயார் பண்ண முனைந்தோம்.
அதன்படி உருவாக்கப்பட்ட விளம்பரம் இது தான்” ஒரு கிரிக்கெட் ஸ்டேடியத்தின் மைதானத்தில் கபில் தேவ் வெளுத்துக் கட்டுவதை,  கூட்டத்தில்  ஒரு பையன் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவன் உற்சாக மிகுதியால் எழுந்து நின்று கையை உயர்த்தி, உரத்தக் குரலில் ” ”நானும் பூஸ்ட் சாப்பிட்டுப் பெரியவனானதும் கபில்தேவ் மாதிரி பெரிய கிரிக்கெட் வீரனாவேன்” என்று சொல்கிறான்.

இந்த பூஸ்ட் விளம்பரமும் பிரபலமாயிற்று. இதைத் தமிழில் முதலில் தயாரித்த போது கபில்தேவ் குரலில் பேசக்கூடிய ஒரு தமிழரை பம்பாயில் தேடிப்பிடித்து ரிகார்ட் செய்தது தனிக் கதை.
 இந்த கால கட்டத்தில் சச்சின் பிரபலமடைய ஆரம்பித்தார். எங்கள் கிரியேட்டிவ் டைரக்டருக்கு திடீரென்று ஒரு ஐடியா தோன்றியது. ”நான் கபில்தேவ் மாதிரி பெரிய கிரிக்கெட்டராக ஆவேன்” என்று சூளுரைத்த அந்தப் பையன் வளர்ந்து பெரியவனானதும், சச்சின் டெண்டுல்கராக ஆவது போல் மார்ஃபிங் செய்து  காட்டலாம், என்று ஐடியா கொடுத்தார். அப்படியே படம் எடுக்கப்பட்டது. அத்துடன்  ’பூஸ்ட் ஈஸ் த ஸீக்ரெட் ஆஃப மை எனர்ஜி’ என்று கபில் தேவ் சொன்னதும்  அந்த சிறுவன் (அதாவது, சச்சின்) அதை மாற்றி  ’பூஸ்ட் ஈஸ் த ஸீக்ரெட் ஆஃப் அவர்  எனர்ஜி’ என்று   கூறுவார். பின்னால் மேலும்  இருவரும் சேர்ந்து ஒரே குரலில் ’பூஸ்ட் ஈஸ் த ஸீக்ரெட் ஆஃப் அவர் எனர்ஜி’ என்று கூறுவதாக மாற்றப்பட்டது.

இந்த விளம்பரங்களும் பரபரப்பாகப் பிரபலமாகிவிட்டது.  ஒரு தொடர்ச்சியாகச் செய்யப்பட்ட  விளம்பரமாக இது பாராட்டும் பரிசும் பெற்றது.
இந்த விளம்பரப் படம் தயாரான சமயம் சச்சின் எங்கள் அலுவலகத்திற்கு வந்திருந்தாராம். (அந்த சமயத்தில் நான் சென்னை  வந்திருந்தேன்.).

 ’நான் ஒரு இந்தியன்” என்று ஒரு சமயம் சச்சின் சொன்னது எல்லோருக்கும் நினைவிருக்கும். அவர் இந்தியன் மட்டுமல்ல, பாரத ரத்னாவும் ஆகிவிட்டார்.
 சச்சினுக்கு வாழ்த்துகள்!
அமுல் விளம்பரம்


நான் ஒரு இங்கிலீஷ்காரன். 
  இங்கிலாந்தின் பிரதமராக (1885) இருந்தவர் லார்ட் பாமர்ஸ்டன் (  LORD PALMERSTON)
பாமர்ஸ்டனிடம் ஒரு ஃப்ரெஞ்சு தொழிலதிபருக்கு ஒரு வேலை ஆகவேண்டியிருந்தது. பாமர்ஸ்டனுக்கு ஐஸ் வைக்கும் உள் நோக்கத்துடன் அந்த தொழிலதிபர் சொன்னார்  **“நான்  ஃப்ரெஞ்சுக்காரனாக பிறந்திருக்காவிட்டால், இங்கிலீஷ்காரனாக இருக்க விரும்புவேன்.”

இதைக்கேட்ட லார்ட் பாமர்ஸ்டன், “ஓ அப்படியா! நான் இங்கிலீஷ்காரனாக பிறந்திருக்காவிட்டால்,  இங்கிலீஷ்காரனாக இருக்க விரும்புவேன்!”
நான் ஒரு இந்தியன் என்று ஒரு சமயம் சச்சின் சொன்னது  மாதிரி இவர் சொல்லவில்லையே தவிர ’நான் ஒரு  இங்கிலீஷ் காரன்’ என்று கூறாமல் கூறியிருக்கிறார்.

** If I was not born a Frenchman, I would wish to be an Englishman!"
 ** If I was not born  an  Englishman, I would wish to be an Englishman!"

November 11, 2013

ஸ்ரீவேணுகோபாலன் மறைந்தார்

±ý «Õ¨Á ¿ñÀ÷ ‚ §Åϧ¸¡À¡Äý (Ò‰À¡  ¾í¸Ð¨Ã) »¡Â¢Ú Á¡¨Ä ¦ºý¨É¢ø ¸¡ÄÁ¡É¡÷.
«ÚÀÐ ÅÕ¼ ¿ñÀ÷.«Å÷ Á¨È× ±ÉìÌ Á¡¦ÀÕõ þÆôÒ.
þô§À¡Ð «¦Á¡¢ì¸¡Å¢ø þÕ츢§Èý.
§¿¡¢ø «ïºÄ¢ ¦ºÖò¾ÓÊ¡¾Ð ±ý §º¡¸ò¨¾ §ÁÖõ «¾¢¸¡¢ì¸î¦ºö¸¢ÈÐ.
«Å÷ ¬ýÁ¡ º¡ó¾¢Â¨¼Âô À¢Ã¡÷ò¾¢ì¸¢§Èý 
- À¢ ±Š Ãí¸¿¡¾ý,
¸ÎÌ
¾¡Ç¢ôÒ
அவரைப் பற்றி நான் எழுதிய பதிவுக்குச் செல்ல
இங்கே சொடுக்கவும்:  ஸ்ரீவே


November 02, 2013

கதம்பம்

 கலியாணங்கள்
கலியாணங்கள் பல விதத்தில் மாறிப் போய் விட்டன. திருமணத்திற்கு முதல் தினமே ரிசப்ஷன் என்று வந்து விட்டது.  முதல் தினம் அரை நாள், முகூர்த்தம் அரை நாள் என்று கல்யாணங்களைச் சுருக்கி விட்டார்கள். .(பழைய காலத்தில்  5 நாள் கலியாணம்  நடந்தது என்று சிலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.) ஒர் விதத்தில் இப்படி ஒரே நாளில் நடத்துவது   நல்லது தான், பெண் வீட்டாருக்குச் செலவு குறைகிறது.
ஆனால் சில புது வழக்கங்கள் வந்து  விட்டன. தரையில் அமர்வது போயே போய்விட்டது. எல்லாருக்கும் நாற்காலிதான்.  பொதுக் கூட்டங்களுக்கே நாற்காலி என்று ஆகி விட்டது என்னும்போது கலியாணங்களில் வராமல் இருக்குமா?
வரவேற்பு மேஜையில் பூ, பன்னீர், சர்க்கரை அல்லது கற்கண்டு இருக்கும். சமீப காலங்களில் அவற்றுடன்  வேறொன்றும் சேர்ந்துவிட்டது, அது ஒரு ’கவர்கள் பண்டில்’. அதில் டிசைன்களுடன், “வாழ்த்துகளுடன்” என்றும் அச்சடிக்கப்பட்டு இருக்கும்.  தவறாமல் மொய் எழுதுவதற்கு மறைமுக நினைவூட்டல்!

இன்னொரு புது வழக்கம்  வந்துவிட்டது. தாலி கட்டப்பட்டதும் எல்லாரும் அரக்கப் பரக்க,மேடைஏறி, மணமகன், மணமகள். அவர்களது பெற்றோர்கள் ஆகியவர்களுக்குக் கை கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஒரே களேபரம்.  புரோகிதரோ,  “இன்னும் சப்தபதி எல்லாம் இருக்கு.. அதுவரைக்கும்  பொண்ணு  கையை மாப்பிள்ளை  பிடிச்சுண்டே இருக்கணும். அதுதான் சாஸ்திரம்” என்று சொன்னாலும் யாரும் காதில் வாங்கிக் கொள்வதில்லை. மேடையில் இருக்கும் பூ, பழங்களை  மிதித்துகொண்டே போய், கைகுலுக்குவதோடு, கவரையும் திணித்துவிட்டு ”ஆபீஸில் மீட்டிங்”, “இன்ஸ் பெக் ஷன்” என்று (பொய்) சொல்லிவிட்டு, நேரே டைனிங் ஹாலுக்குப் போகிறார்கள்! இந்த சமயத்தை நழுவவிட்டால், அன்பளிப்பு கொடுக்க பின்னால் அரை மணி அல்லது ஒரு மணி நேரம்  கியூவில் நிற்க வேண்டி இருக்கும் என்பது ஒரு ரகசிய காரணம்!!
ஒன்றிரண்டு திருமணங்களில் புரோகிதர்,  சப்தபதியின் முக்கியத்துவம் என்ன, எப்போது கை கொடுக்கலாம் என்று ஒரு சின்ன உபன்யாசமே செய்கிறார். ஆனால் யார் கேட்கிறார்கள்? இனிமேல் அழைப்பிதழ்களில் ”சப்தபதி முடியும்வரைக் கைகுலுக்குவதைத்  தவிர்க்கவும்” என்று  அச்சடிப்பார்கள் என்று நினக்கிறேன்!
(கலியாணங்களில் செருப்பு திருடு போகும் ( அறுவை) ஜோக்குக்கள்  இப்போது பத்திரிகைகளில் வருவது இல்லை. காரணம் யாரும் செருப்பைக் கழட்டுவதில்லை -டைனிங் ஹாலில் கூட!)

 மாறிப் போன டயலாக்குகள்.
  OVER THE YEARS சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கேட்டவை.
1960  களில்
“ குழந்தை.. டில்லி போனதும் ‘பத்திரமாய்ப் போய் சேர்ந்தேன்னு ஒரு கார்டு போட்டுடு.”
“ சரிப்பா. அப்படியே செய்றேன்.”
*          *            *
1970  களில்:
”குப்பு.. டில்லி போனதும் தந்தி கொடுத்துடு.”
“ஓ,கே, அப்பா.”
1980 களில்
”சுரேஷ்.. டில்லி போனதும் எகஸ்பிரஸ் தந்தி கொடுத்துடு”
“ஓ,கே, டாடி.”
1990 களில்
“நீல்.. டில்லி  போனதும் ஒரு டிரங்கால் பண்ணி சொல்லிடு.”
“ யா.. டாட், ஐ வில்!”
2000 களில் .
“அக்‌ஷய்..டில்லி  போனதும் ஒரு எஸ்.எம்.எஸ் கொடுத்துடு.”
 ”DONE....Bye.."
2010 களில்
” ஷிவ்..டில்லி  போனதும்  எனக்கு மிஸ்டு கால் கொடு. நான் கூப்பிடறேன்!:”
“எந்த போனுக்கு? லேண்ட் லைனுக்கா? ஐஃபோனுக்கா?  பிளாக் பெர்ரிக்கா?
ஐ-பேடுக்கா?
2020 களில்
“இத பாரு.. பேஸின் ப்ரிட்ஜ் போனதும் போன் பண்ணு. அப்புறம் விஜயவாடா, நாக்பூர், இடார்ஸி, ஆக்ராவில் பண்ணு. டில்லியிலே ரயிலை விட்டு இறங்கறதுக்கு முன்னே பண்ணு.,  மொத்தம் ஆறு பையையும்  எடுத்துண்டுட்டியான்னு சொல்லு.”
“சரி..சரி..ச்ர்ர்ர்ர்ர்ரி... அடுத்த தடவையிலிருந்து ஏர்ல தான்.”

October 20, 2013

காலம் மாறிப் போச்சு

நான் 1962-ல் - அதாவது 50 வருஷத்திற்கு முன்பு- டில்லிக்கு மாற்றாலாகிப் போனபோது அங்குள்ள பல விஷயங்கள் எனக்குப் புதுமையாகப் பட்டன. அவற்றைத் தொகுத்து ‘அரே டில்லிவாலா- என்று ஒரு கட்டுரையை எழுதி குமுதத்திற்கு அனுப்பினேன். அது குமுதத்தில் இரண்டு பக்கக் கட்டுரையாகப் பிரசுரம் ஆயிற்று. (எழுத்துத்  துறையில் நான் காலை வைத்ததற்கு அதுவே பிள்ளயார் சுழி போட்டது).
அந்த டில்லிப் புதுமைகள் பல இன்று காணாமல் போய்விட்டன.
சிலவற்றைப் பார்ப்போம்.
 நடமாடும் இஸ்திரி சேவை: தள்ளு வண்டியில் இஸ்திரி பெட்டியுடன் வீதிகளில் பலர்  வருவார்கள்.  நாம் கொடுக்கும் துணிகளுக்கு இந்த ‘பிரெஸ்வாலா’க்கள் நம் வீட்டு வாசலிலேயேஇஸ்திரி போட்டுக் கொடுப்பார்கள். நாளடைவில் ’நடமாடும்’ என்பதை எடுத்துவிட்டார்கள். ஆங்காங்கு மரத்தடி நிழலில் இஸ்திரி பெட்டியுடன் தொழிலை  நடத்த ஆரம்பித்தார்கள்.
அதன் பிறகு இஸ்திரி பெட்டியுடன் இன்னொரு பெட்டி சேர்ந்து கொண்டது. அது டிரான்சிஸ்டர்!. ‘தம்மாரே தம்’ ‘ மெஹ்பூபா மெஹ்பூபா’’’ஜூட்டு போலே கவ்வா காட்டே’ போன்ற பாடல்கள் ஹனுமான் சாலிஸா மாதிரி விடாமல் ஒலித்துக் கொண்டிருக்கும். சமீப காலத்தில் என்ன மாறுதல் வந்திருக்கிறது என்று தெரியவில்லை. டிவிடி பிளேயர் வந்திருக்கும் என்று நினக்கிறேன்!

டில்லி பிஸ்கெட்:
டில்லி  மார்க்கெட்களில் பிஸ்கெட் பண்ணித் தரும்  கடைகள் இருந்தன - நம் ஊர் வறுகடலைக் கடைகள் மாதிரி.. கோதுமை மாவு, பால், டால்டா  (இன்று டால்டா இருக்கிறதா என்று தெரியவில்லை!) முதலியவற்றைக் கொடுத்து விட்டு வந்து, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு போனால் நாம் கொடுக்கும் மாவுக்கு எவ்வளவு வருமோ அவ்வளவு பிஸ்கெட்கள் தட்டு தட்டாக  ரெடியாக இருக்கும். ஒரு பிஸ்கெட் கூட  அவர்கள் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.
சென்னை போகிறவர்கள் எல்லாரும், பெரிய எண்ணை டப்பா அளவு டின்னில் எடுத்துக் கொண்டு போவார்கள். நாளடைவில்  இந்த மாதிரி பிஸ்கெட்களை சிறு தொழில் நிறுவனங்கள்  சொந்தமாகத் தயாரித்து பிளாஸ்டிக் கவரில்  ’பேக்’செய்து விற்க ஆரம்பித்தார்கள். அதனால் மார்க்கெட்   பேக்கரிக்கடை    தொழில் நலிந்து போய்விட்டது.

சண்டே பஜார்
ஞாயிற்றுக் கிழமைகளில் டில்லி செங்கோட்டைக்கு எதிரே உள்ள சாந்தினி சௌக்கில் நடைபாதைக் கடைகள் நூற்றுக்கணக்கில்  முழுத்தெருவிலும் முளைத்துவிடும்.
செங்கோட்டைக்கு புது டில்லிப் பகுதிகளிலிருந்து போகிறவர்கள் தாரியாகஞ்ச் என்ற வீதி வழியாகத்தான் போகவேண்டும். தாரியாகஞ்ச்  தெருவின் ஒரு பக்கம்  நடைபாதைகளில்  பழைய புத்தகங்கள் பரப்பி இருக்கும். நான் அங்கு வாங்கிய புத்தகங்கள் ஏராளம்.
திடீரென்று அந்தக் கடைகளை அங்கு பரப்பக் கூடாது என்று துரத்தி விட்டார்கள்.  எல்லாரும் செங்கோட்டைக்குப் பின்னால் இருக்கும் மைதானத்தில் கடை வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்தார்கள். அங்கு போக எனக்குப் பிடிக்க வில்லை.  அதற்கு ‘சோர் பஜார்: - (திருட்டுப் பொருள்கள் மார்க்கெட்!) என்று பெயர்.  இன்னும் அங்கு சண்டே மார்க்கெட் இருக்கிறதா என்று தெரியவில்லை. காரணம் டில்லியில் பேட்டைக்குப் பேட்டை ஒரு நாள் இப்படிப்பட்ட மார்க்கெட் வந்து விட்டது!

டில்லியில் மாறாததும் உண்டு
டில்லியில் மாறாதது பல விஷயங்கள் இருக்கலாம்.  நான் டில்லியை விட்டு வரும் வரை மாறாத  ஒன்றைச்  சொல்கிறேன்.
டில்லிக்குப் போன தினம் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளை பார்த்தேன். அதில் ஆசிரியர் கடிதத்தில் டில்லி பஸ்களைப் பற்றி  ஒரு கடிதம் வெளியாகி இருந்தது.   அந்த கால கட்டத்தில் டில்லி பஸ்களை  Delhi Transport Underaking   என்ற அமைப்பு நிர்வகித்து வந்தது. கடிதத்தில், இந்த டி.டி.யு பஸ்களில் ரூட் போர்டுகள் இருப்பதே இல்லை.   “ பஸ் எங்கே போகிறது? என்று கண்டக்டரைக் கேட்பதாக இருக்கிறது. பல சமயம் கண்டக்டரைக் கேட்பதற்குள் பஸ் புறப்பட்டுப் போய்விடுகிறது. எத்தனை தடவை புகார் எழுதினாலும் பயனில்லை” என்று யாரோ ஒருவர் புலம்பி இருந்தார். 2002-ல்  டில்லியை விட்டுச் சென்னை வரும் தினம், பேப்பரில் கிட்டதட்ட இதே ரீதியில் ஒரு கடிதம் வெளியாகி இருந்தது. என்ன வித்தியாசம்  DTU என்பது DTC   ( (டில்லி டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்) என்று மாறிவிட்டது!
அந்த நாள் முதல் இந்த நாள் வரை வான்மதியும், மீனும், டில்லி பஸ்ஸும் மாறவில்லை என்பது உண்மை!

டில்லி கலியாணங்கள்
டில்லியில் பெரும்பாலான கலியாணங்கள் பிரம்மாண்டமான ஷாமியானா பந்தலில்தான் நடைபெறும். வீதியை அடைத்துக் கொண்டு  பந்தல் போட்டுவிடுவார்கள். குதிரை மீது அமர்ந்து அரும் மணமகனை பேண்ட் வாத்தியம் முழங்க டான்ஸ் ஆடி அழைத்து வருவார்கள். நுழைவாயிலுக்கு சுமார் 50 கெஜ தூரம் வந்ததும் மேலும் பலர் டான்ஸ் ஆடுபவர்களுடன் சேர்ந்து கொள்வார்கள். ”சாச்சி வா”, ”அத்தை வா”, ”அங்கிள் வாங்கோ” என்று பலரைக் கைபிடித்து  இழுத்து ஆடச் சொல்வார்கள். டிரம்காரர் சரக்கு போட்டவர் போல -  போல் என்ன? போட்டவர்தான்!- வெறியுடன் டிரம் அடிக்க அடிக்க, ஆடுபவர்கள் மாப்பிள்ளை மேலே போக விடாமல் ஆடிக்கொண்டு (தள்ளாடிக்கொண்டும்!)  இருப்பார்கள். நம்புங்கள், பல சமயம் இந்த 50 கெஜ தூரத்தைக் கடக்க ஒரு மணி நேரம் கூட ஆகிவிடும்.பந்தலுக்குள் நுழைந்ததும் 90 பங்கு கூட்டம் காணாமல் போவிடும். ஆம்,எல்லாரும் சாப்பிடப் போய்விடுவார்கள்!.கலியாணப் பெண், பிள்ளை, புரோகிதர் மற்றும் 7,8 பேர் தான்  மணமேடையில் இருப்பார்கள்!
டில்லிக்குப் போன புதிதில், கலியாண வீட்டார் ‘யாரும் நம்மைச் சாப்பிடக் கூப்பிடவில்லையே’ என்று காத்திருந்து விட்டு, சாப்பிடாமலேயே வந்திருக்கிறேன்.
டில்லிக் கலியாணங்களில் சீர் வரிசையில் நிச்சயம் இடம் பிடித்திருக்கும். ஒரு தையல் மெஷின். (டெய்லர் மாடல் அல்ல: கை மெஷின்!) எனக்குத் தையல் மோகம்  (இரண்டு அர்த்தத்திலும்!)  உண்டு என்பதால். சீர் வரிசையில் இருக்கும் மெஷின் கண்ணில் தவறாது படும்!

எல்லாருக்கும் தைத்துக் கொடுக்கிற வேலை‘நம் பெண் தலையில்  விழுந்துவிடக்கூடாது என்பதற்காக சமீப காலங்களில் பெண் வீட்டுக்காரர்கள் மெஷினை‘  அம்பேல் ஆக்கிவிட்டார்கள்!

சென்னையில்  மாறிப் போச்சு
தொடாதே!
டில்லியில் காய்கறி கடைக்குப் போனால் முதலில் ஒரு தகரத்தட்டை (பழைய பிலிம்ரோல் டப்பாக்கள்!) நம்மிடம் கொடுப்பார்கள். கறிகாய்களைப் நாம் பொறுக்கிக் கொடுக்கவேண்டும்.
இருபது வருஷத்திற்கு மேல் டில்லியிருந்துவிட்டுச் சென்னைக்கு மாற்றலாகி வந்தேன். நம் ஊர், நம்ம மொழியில் பேசலாம் என்று மனதில் ஒரே உற்சாகம்.  ( சர் வால்டர் ஸ்காட் பாடல் ஞாபகம் இருக்கிறதா? Breathes there the man with soul so dead /  Who never to himself hath said, /  This is my own, my native land!)

சென்னை வந்ததும்ஆவலாக சைனா பஜார் சென்றேன். நடைபாதையில் காய்கறி கடைகள் இருந்தன. வெண்டைக்காய் அழகிய  LADIES FINGER மாதிரி இருந்தது.(டில்லியில் அதற்கு  ‘பிண்டி’ என்று கரடு முரடான பெயர்!)
இரண்டு காயை எடுத்திருப்பேன்.  “இன்னா பொறுக்கறே?.நான் எதுக்குக் குந்திக்கினு இருக்கேன்.... பாத்தியாடி அருக்காணி, வெண்டைக்காயைப் பொறுக்க வந்துட்டாரு இவரு டில்லி பாதுஸா  மா(தி)ரி” என்றார்.

இப்போது சென்னையில் எல்லா காய்கறி கடைகளிலும் நம்மை டில்லி பாதுஷாவாக ஆக்கி விட்டார்கள். ஆம், இப்போதெல்லாம் பிளாஸ்டிக் தட்டை எடுத்துப் போடுகிறார்கள். நாமே பொறுக்கி கொள்ளலாம்.யாரும்  “பாத்தியாடி அருக்காணி” என்று குரல் கொடுப்பதில்லை!
நல்ல மாறுதல்!

இன்னும் நிறைய இருக்கின்றன. பின்னால் பார்க்கலாம்.

October 13, 2013

அடுத்த பதிவு

அனைவருக்கும்  நவராத்திரி வாழ்த்துகள்.
தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த பதிவு சற்று தாமதமாக வரும்.
-கடுகு                                                                 

October 04, 2013

கேட்ட ஞாபகம் இல்லையோ!




அந்த காலத்தில் கேட்ட சில வசனங்கள், கேட்டவர்களுக்கே  மறந்து போயிருக்கும்.  புதிய தலைமுறையினர் கேட்டிருக்கவே மாட்டார்கள். அவற்றை இப்போது புதிய  தொழில் நுட்பத்தில் - அதாவது டிஜிட்டலில்- தருகிறேன்.

1968-ல் கேட்டது
 அடப்  பாவமே, பெட்ரோல் விலையை லிட்டர் ஒரு ரூபாயிலிருந்து ஒரு ரூபாய் 15 நயா பைசாவாக  ஏத்திட்டாங்களே... மோபெட்டிற்குப் பெட்ரோல் போட்டுக் கட்டுப்படியாகாது. இனி மேல் நடை ராஜாதான்!

1970 களில் சொன்னது.
என்ன அமெரிக்கா வேண்டி கிடக்குது, கலியாணம் பண்ணிக்கறதுக்கு முன்னேயே டைவர்ஸுக்குத் தயாராகி விடுகிறார்கள்.. விவாகரத்துக்குன்னு பல வக்கீல்கள் இருக்காங்களாம்....அந்தக் கலாசாரம் எல்லாம்  எல்லாம் நம்ம  ஊர்ப்பக்கம் தலைகாட்ட முடியாது.

 60 களில்
ஏம்பா பழைய பேப்பர் கிலோ ஆறணாவுக்குத்  எடுக்கிறேன்னு  சொல்றியே,.. ஊரெல்லாம் விலைவாசி எப்படி ஏறிண்டே இருக்குது, நீ மட்டும் குறைச்சுண்டே வர்றே?

60 களில்
என்னடி ஜயா, உன் நாட்டுப் பொண்ணு இப்படி செய்யறா? ஆம்பிளைக் குழைந்தைக்கு பூ போட்ட சட்டை, பெண் குழைந்தைக்கு பேண்ட்.. நன்னாவா இருக்கு?. நாளைக்கு பெரிவங்களா போனால்கூட இப்படிதான் போடுவா.. போ.. கலி முத்திப் போச்சு!

1962-ல்
லட்சுமி, கிளம்பலையா, மவுண்ட் ரோட் இந்தியா காஃபி ஹவுஸுக்கு? காபிக் கொட்டை வாங்கிண்டு வர வேண்டாம்? ஆளுக்கு ஒரு கிலோ தர்றங்களாம்.

1958-ல்
என்ன சம்பந்தியோ! .. பிள்ளை வீட்டுக்காராளை “ சாப்பிட வாங்கோ”ன்னு அழைக்கவேண்டாமோ.. நாமே போய் உட்கார்ந்து சாப்பிட அவ்வளவு கதி கெட்டா கிடக்கிறோம்?
1945-ல்
டாக்டரை எதுக்கு வீட்டுக்கு வரச்சொல்லணும்?. 5 ரூபாய் பழுத்து விடும். நாமே அவர் வீட்டுக்குப் போயிடலாம். இரண்டு ரூபாயுடன் முடிந்துவிடும்.
1953-ல்
“ இந்த கிட்டு,750 ரூபாய் கொடுத்து ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள் வாங்கிட்டானாம்.. தலைகால் புரியலை!”

1944-ல்    
 “ டேய், ராமு. போடா, சீக்கிரம். கடைத்தெரு மணிகண்டன் ஷாப்லே ஸ்டாண்டர்ட் கிளாத் தர்றாங்களாம். இந்தா அஞ்சு  ரூபாய் .. அஞ்சு கெஜம் துணி வாங்கிண்டு வா. ஓடு.”

1950-ல்
சைக்கிளில் லைட் இல்லாம போயிட்டேன். போலீஸ்காரன் பிடிச்சுட்டான். ஒரு ரூபா அழுதேன்.
--------------------
ஆர். ஜகன்னாதன் அவர்களின்  உபயம்:
'70 களில் - 
என்னமோ போன் வந்துடுத்தாம், ஆத்திர அவசரத்துக்கு ஒரு போன் பண்ணிக்கலாமான்னு கேட்டா அலட்டிக்கிறா!

September 27, 2013

ஆ, அமெரிக்கா-2

ஐயோ சிக்கடாஸ்
  
“கொசுத் தொல்லை தாங்கலையேடா, நாராயணா” ( என்று   எல்லா வலைப்பதிவுகளிலும் ((என் வலைப்பதிவுகளுக்கு நீங்கலாக!?) பின்னூட்டம் போடும் அன்பர்களுக்கு ஒரு சிறப்புச் செய்தி, 

அமெரிக்காவில் கிழக்குக் கரையோரம் உள்ள மாநிலங்களில் ஒரு படையெடுப்பு 17 வருஷங்களுக்கு ஒரு முறை  ஜூலை- ஆகஸ்ட்
மாதங்களில் தவறாமல் நடந்து வருகிறது. கிட்டதட்ட கரப்பான் பூச்சி மாதிரி இருக்கும் சிக்கடாஸ் (CICADAS)  மில்லியன் கணக்கில் -- இல்லை, இல்லை பில்லியன் கணக்கில் - வந்து வீதியில் உள்ள  மரங்களையெல்லாம் அப்பிக் கொள்கின்றன. அவை போடும்  இரைச்சல்  (கோஷ்டிகானம்!) கிட்டதட்ட வயல் வெளிகளில் வைக்கப்படும் தண்ணீர் பம்புகளைத் தூக்கிச் சாப்பிட்டு விடும்!

இந்த வருடம் படையெடுப்பு வருஷம். சுமார் 300 வருஷங்களாக இது நடைபெற்று வருவதாகச் சொல்கிறார்கள். 17 வருஷம் அவை அங்கு இருக்கிறதாம்? மண்ணுக்குள்!

இந்த வருடம் சிக்கடாஸின் எண்ணிக்கை  அந்தந்த  பகுதி மக்கள் எண்ணிக்கையைப் போல்  தோராயமாக 600 மடங்காக  இருந்ததாம்!
ஐயோ, சிக்கடாத் தொல்லை தாங்கலையேடா, நாராயணா” என்று பின்னூட்டம் போடவிரும்புபவர்கள் 2030 வரை காத்திருக்க வேண்டும்!
 2030-ல் அவை விஜயம் செய்யும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை!

ரயிலில் கவிதை
அமெரிக்காவில் விமானம், ரயில், பஸ். கார், சொந்த ஹெலிகாப்டர் என்று பல வேறு வாகனங்களில் ஊருக்குள்ளும், ஊர் விட்டு ஊரும் சளைக்காமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

September 20, 2013

MAD Magazine-க்கு சஷ்டியப்த பூர்த்தி



புகழ் பெற்ற நகைச்சுவைப் பத்திரிகையான   MAD இதழுக்கு 60 வயது ஆகிவிட்டது.. ‘ MAD  பத்திரிகையும்  நானும்’ என்ற பதிவை முன்பே (இங்கு சொடுக்கவும்)எழுதி உள்ளேன். இது இரண்டாம் பதிவு.
சமீபத்திய ஆண்டுகளில்  MAD  இதழ்களை   நான் பார்க்க வில்லை. ஆனால் அமெரிக்கா வரும் சமயம் புத்தகசாலையில் புரட்டிப் பார்ப்பதுண்டு. பிரசுரகர்த்தர்  வில்லியம் கெய்ன்ஸ்  காலமாகி விட்ட பிறகு பத்திரிகையின் ஜீவன் குறைந்து விட்டதாக எனக்குத் தோன்றியதும் ஒரு காரணம். திரைப்படங்கள் பார்ப்பதை நான்  எப்போதோ நிறுத்தி விட்டேன் என்பதால்  அமெரிக்கத்  திரைப்படங்களை நையாண்டி செய்யும் படக்கதைகள் பல  புரிவதில்லை.

சென்ற   வருஷம் ஒரு அகராதி சைஸ் 1000 பக்க   MAD கலெக் ஷன் புத்தகம் கிடைத்தது. அதனால் பழைய பித்து பிடித்துக் கொண்டது!
சமீபத்தில்  60 ஆண்டு நிறைவை ஒட்டி, தீபாவளி மலர்  அளவில் கனமான   ஆர்ட் பேப்பரில் . TOTALLY MAD- 60 years of Humor,Satire, Stupidity and Stupidity என்ற பெயரில்  புத்தகம் வெளியிட்டிருக்கிறர்கள். அபாரமான புத்தகம். பழைய இதழ்களிலிருந்து பல நகைச்சுவை அம்சங்களை தொகுத்துத் தந்திருந்தாலும் புதிதாகச் சில கட்டுரைகளையும் சேர்த்திருக்கிறார்கள்.
MAD பத்திரிகையைப் பற்றிய   பல சுவையான  கூடுதல் தகவல்களை இங்கு தருகிறேன்.
MAD பத்திரிகையில் விளம்பரங்களைப் போடுவதில்லை என்பது கெயின்ஸின்  கொள்கை. தொண்ணூறுகளில்  MAD உயர்ந்த பட்சமாக கிட்டத்தட்ட  21 லட்சம் காபிகள் விற்றது. சமீப காலத்தில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளதாம்.
கறுப்பு வெள்ளையிலிருந்து கலருக்கு மாறியபோது செலவை ஈடு கட்ட விளம்பரங்களை MAD போட ஆரம்பித்தது. அத்துடன்,வருஷத்தில் 8 இதழ்கள் என்பதை 6-ஆகக் குறைத்து விட்டது.
ஒரு சிலர் MAD பத்திரிகை மீது அவ்வப்போது வழக்கு தொடுத்து இருக்கிறர்கள். அதனால், MAD பத்திரிகையில், ஆசிரியர், உதவி ஆசிரியர்,பிரசுரகர்த்தர்,என்ற பெயர்ப் பட்டியலில் தங்களது வழக்கறிஞரின் பெயரையும் சேர்த்து விட்டார் வில்லியம் கெயின்ஸ்!

MAD பத்திரிகை மீது போடப்பட்ட  வழக்குகளில் இரண்டு  சுவையானவை.

September 12, 2013

ஜி-மெயிலில் வந்த கடிதம்


எனக்கு தினம் யார் யாரிடமிருந்தோ கடிதங்கள் வருகின்றன. லாட்டிரி பரிசு விழுந்ததாக இரண்டு கடிதமாவது வரும், அரசியல், ஆன்மீகம், புகைப்பட ஆல்பங்கள் என்று  பல. பெரும்பாலானவற்றை முதல் வேலையாக குப்பைத்  தொட்டிக்கு அனுப்பி விடுவேன். இன்று ஒரு  கடிதக் கவிதை வந்தது. அதை பதிவாகப் போடலாம் என்று எண்ணினேன். அதற்கு முன்பு ஒரு முன்னுரை எழுதுவது அவசியம்.
*                   *               *
இது 60-களில் நடந்த கதை. அந்த இளைஞன் புனேயில் ராணுவ மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தான்.   ஏ.எஃப்.எம்.சி எனப்படும்  (ARMED FORCES MEDICAL COLLEGE) மருத்துவக் கல்லூரி ஆரம்பித்த வருஷம் முதல் செட் மாணவர்களில் அவனும் ஒருவன். படிப்பில் கெட்டிக்காரன். எம்.பி.பி.எஸ் பரீட்சையில் புனே சர்வகலாசாலையிலேயே முதல் ரேங்க் மாணவனாகப் பாஸ் செய்தான்.
மேலே எம்.டி படிக்க வேண்டும் என்று அவன் விரும்பினான். எம். பி. பி. எஸ் முடிந்ததும் ராணுவத்தில் 2 (5 ?) ஆண்டுகள் பணி புரிய வேண்டும் என்ற நிபந்தனைக்குச் சம்மதம் தெரிவித்திருந்தான். (அதன் காரணமாக கல்லூரியில் இடமும்,  கட்டணத்தில் சலுகையும் அவனுக்குக் கிடைத்தது.) ஆகவே அவன் எம்.டி சேர அனுமதி கிடைக்கவில்லை.  (பிரபல மருந்து தயாரிப்பு கம்பெனி ஒன்று அவன் படிப்பிற்கு ஆகும் முழுச் செலவையும் ஏற்றுக் கொள்ள, தானாகவே முன் வந்தது!) அதை நிராகரிக்க வேண்டியதாகி விட்டது.

அவன் ராணுவத்தில் பணியாற்றத் துவங்கினான். பிறகு மேலே படிக்க அவனுக்கு அனுமதி தந்து விட்டார்கள் - ஒன்றிரண்டு நிபந்தனைகளுடன். அவனும் எம்.டி படிப்பில் சேர்ந்தான். இந்த சமயத்தில் பங்களா தேஷ் போர் துவங்கியது. அவனை டியூட்டிக்கு வரச் சொன்னார்கள்.
போர் முடிவதற்கு முந்தைய தினம் புனேயிலிருந்த அவனை அஸ்ஸாம் போகச் சொன்னார்கள். அங்கு சில ராணுவ வீரர்களுக்கு அவசர மருத்துவ சேவை செய்வதற்கு (என்று நினைக்கிறேன்). விமானப் படை விமானம். அஸ்ஸாமில் இந்திய எல்லையினருகில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் தொடர்பு விட்டுப் போய்விட்டது.

பயங்கர காட்டுப் பகுதியில் நடந்தே போய்த் தேடினார்கள். இரண்டு நாள் கழித்து, எரிந்த விமானத்தை கண்டு பிடித்தார்கள். விமானத்தில் சென்ற ஐந்து ராணுவ அதிகாரிகளும் பரிதாபமாக எரிந்து போயிருந்தார்கள்.


அந்த மருத்துவனின் ஈமச் சடங்குகளை நான் செய்தேன். அவன்: என் 26 வயது தம்பி.
இந்த விவரங்கள் இப்போதைக்குப் போதும்.   இனி கவிதை வடிவில் உள்ள கடிதத்தைத் தருகிறேன்..
*                   *           
Dear Sir: A poem by a young Indian Army Officer..
A brief note: It has been composed by a fourth generation, 24-year old career officer in the Indian Armed Forces, spurred by the report of the Sixth Pay Commission and an insensitive article written by a 'respectable' citizen of the country in a national daily on the armed forces and the pertinence of the Sixth Pay Commission therein.

This free-flowing verse has not been edited; it's to ensure that the originality of the angst is maintained. After all, when you are in pain, the language of expression is the last thing in your mind --Chandra
 ______________________
Dear Sir!
How you play with us, did you ever see?
 At Seven, I had decided what I wanted to be;
 I would serve you to the end,
 All these boundaries I would defend.


 Now you make me look like a fool,
 When at Seventeen and just out of school;
 Went to the place where they made "men out of boys"
 Lived a tough life …sacrificed a few joys…


In those days, I would see my 'civilian' friends,
 Living a life with the fashion trends;
 Enjoying their so called "College Days"
 While I sweated and bled in the sun and haze…
But I never thought twice about what where or why
 All I knew was when the time came, I'd be ready to do or die.

September 04, 2013

ஒரு அசாதாரணப் பெண்: அருணிமா

சமீபத்தில் பரோடா ராமகிருஷ்ண மிஷன் மடத்தில் சுவாமி விவேகானந்தரின் 150 பிறந்த விழாவை, இரண்டு நாள் சர்வ தேச இளைஞர்கள் மகாநாடாகக் கொண்டாடினார்கள். 24 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர். முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள் அதில் உரை நிகழ்த்தினார்.
அமெரிக்காவிலிருக்கும் என் பேத்தி அருந்ததி அதில் கலந்து கொண்டாள். (அவள் ஞாயிற்றுக்கிழமைகளில் நியூ ஜெர்சியில் உள்ள விவேகானந்தா வித்யாபீட் என்ற, இந்திய கலாசாரத்தை  போதிக்கும் பள்ளியில் பயில்கிறாள். அந்த அமைப்பிலிருந்து சுமார் 60 பேர்  (மாணவர்கள்+பெற்றோர்+ஆசிரியர்கள்) மகாநாட்டில் கலந்து கொண்டார்கள்.(ஆசிரியர்கள் எல்லாரும் தொண்டு பணி புரிபவர்கள். யாரும் சம்பளம் வாங்குவதில்லை!)
விவேகானந்தரின்  பிறந்தநாள்  விழாவில் பலர் உரை ஆற்றினார்கள். அவர்களில்,  அருணிமா சின்கா எனும் 25 வயது பெண்மணியும் ஒருவர்.  அவர் எவரஸ்ட் சிகரத்திற்குப் போய் வந்த வீராங்கனை.  எந்த ஒரு பெண்ணிற்கும் இது பெரிய சாதனைதான். அருணிமாவைப் பொறுத்த வரை இதை அசாதாரணமான சாதனை என்றுதான் கூறவேண்டும். காரணம், அவருக்கு ஒரு கால் கிடையாது! செயற்கைக் கால்தான்!
அருணிமா கால்களை இழந்தது எப்படி என்று துவங்கி,  மெய்சிலிர்க்கும் தகவல்கள் பலவற்றை என் பேத்தி அருந்ததி (வயது:15) என்னிடம் கூறினாள். அவளிடம். “நீயே ஒரு கட்டுரை எழுதிக் கொடு. என் பிளாக்கில் ஒரு பதிவாகப் போட்டு விடுகிறேன்” என்றேன்.
அருந்ததி   ஆர்வத்துடன் எழுதிக் கொடுத்த, நம்மை நெகிழ வைக்கும். அந்த ஆங்கிலக் கட்டுரை இதோ!

Arunima Sinha – An Inspiring Story
by Arundhati Johri
         Have you ever wondered what it would be like to climb Mt. Everest?
How about with an amputated leg?

Arunima Sinha, (25) the first lady in the world to climb Mt. Everest with an amputated leg, has an inspiring story behind her success.

            While aboard a train travelling from Lucknow to Delhi on the 11th of April, 2011, for an interview, she was threatened by a band of dacoits. The robbers had entered her train car, and were robbing and injuring the passengers.
Arunima resisted the robbers when they attempted to take her gold chain. In anger, they picked her up and threw her out the train, on to the adjacent railway tracks below. Unfortunately, a train was coming her way! The train ran over her leg. As she lay injured between the tracks, Arunima frantically called for help and screamed and screamed. To her dismay, no help came to her aid, as it was 1:00 a.m. in the morning. Forty-nine more trains passed over her all night long. “Yes,  I counted” she says!

August 28, 2013

ஆ ,அமெரிக்கா: இரண்டு இலவசம்


ஆ, அமெரிக்கா:
 --இரண்டு இலவசம்

அமெரிக்காவில் நார்த் கரோலினா மாநிலத்தில் சேப்பல்ஹில் என்ற  நகரில் சில மாதங்கள் தங்கி இருந்தேன். அந்த மாநிலத்தில்தான் கிட்டிஹாக் என்ற புகழ் பெற்ற இடம்  இருக்கிறது. கிட்டிஹாக்கின் புகழிற்கு என்ன காரணம்? அங்குதான் ஆர்வில்-வில்பர் ரைட் சகோதரர்கள் கணக்கில்லாத முயற்சிகளுக்குப் பிறகு முதல் முதல் விமானத்தைப் பறக்க விட்டார்கள்.

ஒரு சமயம் கிட்டி ஹாக்கிற்குப் போனேன். அங்குள்ள ஒரு சிறிய குன்றிலிருந்துதான் அவர்கள் பறந்தார்கள். அவர்கள் சாதனை புரிந்த  அந்த குன்றில் ஒரு நினைவுத்தூண் வைக்கப்பட்டிருக்கிறது.

குன்றை ஒட்டிய மைதானத்தில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் தரையில் மைல் கல் மாதிரி ஒரு கல்லை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். முதன் முதலில் அவர்கள் பறந்த விமானம், அந்த தூரம்தான் பறந்து வந்து, விழுந்து நொறுங்கியது! ஆண்டு  1903!

ஆனால் அதுவே பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. அதனால் விமானம் நொறுங்கியதை எண்ணி அவர்கள் மனம் தளரவில்லை. மேலும் ஊக்கத்துடன் முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களின் தந்தையார் ஒரு பிஷப், அவர் ஒரு புத்தகப்பிரியர். வீட்டில் நிறைய புத்தகங்கள் வைத்திருந்தார்.   விமான ஆராய்ச்சி செய்த பலர் எழுதிய புத்தகங்களை சகோதரர்கள் முனைந்து படித்தார்கள்.

ரைட் சகோதரர்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்தது.1905’ல் முதன் முதலாக அவர்களுடைய விமானம் அரை மணி நேரம் பறந்தது

கிட்டிஹாக்கில் அந்த புகழ் பெற்ற குன்றுக்கு அருகில் ரைட் சகோதரகள் விமானப் பொருட்காட்சி உள்ளது.

ஐந்தாறு அறைகளில் படங்களும் மாடல்கள் இருக்கின்றன. அது மட்டுமல்ல. முதன் முதல் பறந்த விமானத்தை அச்சு அசலாக மாடல் செய்து வைத்திருக்கிறார்கள். நுழைவுக்கட்டணம் 10 டாலர் என்று நினைவு. டிக்கட் வாங்கப் போனோம். டிக்கட் கவுண்டரில் ”இன்று இலவசம். யார் வேணுமானாலும் போகலாம்” என்றார்கள். ஏன் என்று கேட்கவில்லை. இலவசம் என்றால் பரவசம்தானே? பொருட்காட்சியைப் பார்த்து விட்டு  வந்தோம். வெளியே வரும்போது ஒரு பணியாளரிடம். “ஆமாம்.. இன்றைக்கு என்ன விசேஷம்? ஏன் இன்று இலவசம்?” என்று கேட்டேன்.

August 19, 2013

புதிய பழமொழிகள்!

ஒவ்வொரு காலத்திலும் ஒரு சில பழமொழி வாசகங்கள் புதிதாகத் தோன்றி அவை நாளாவட்டத்தில் பழமொழிகளாக ஆகி இருக்கும்.
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற சில புதிய பழமொழிகளை உருவாக்கும் போட்டியை  நாலைந்து வருஷங்களுக்கு முன்பு ‘நியூ யார்க் டைம்ஸ்’  வைத்தது. வாசகர்களிடமிருந்து வந்த சுமார் 1200 பழமொழிகளைப் பிரசுரித்தது. அவற்றில் சிலவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.

அதற்குமுன் --
தமிழுக்குச் சேவை செய்ய எண்ணி, நான் உருவாக்கிய சில தமிழ்ப் பழமொழிகளைத் தருகிறேன். அவற்றைப் படித்து ‘அனுபவியுங்கள்’!
* உன் ரிங்டோனைச் சொல்; நீ யார் என்று சொல்லுகிறேன்.
* ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் ஒன்பது தொலைபேசி அழைப்பு மிச்சமாகும்.
*பழைய கேபிள்; புதிய கனக் ஷன்.
*முளைச்சு மூணு இலை விடலை. அதுக்குள்ள முப்பது ஜி-மெயில் .
*இவனுக்கு எப்பவும் விண்டோஸே கதி;  அடுத்த வீட்டுப் பெண் WINDOW-லே!
*நேத்து பொறந்த பையன், கேக்கறான் பத்து வேலன்டைன் கார்டு.
* பையன் ஐ-பேட் (iPAD), பொண்ணு ஐ-ஃபோன் (iPhone); அம்மா மினி ஐ-பேட் Mini-iPAD), பேரன்- ஐ-பாட் (iPOD). பேத்தி-ஐ-டச் (iTouch), அப்பா:  I PAY!
* கெட்டிக்கார பொண்ணு கிட்ட BROAD-BAND இருந்தால் போதும்   HUS-BAND-ஐ வலை போட்டு பிடிச்சுடுவா!
இனி ‘நியூ யார்க் டைம்ஸ்’ போட்டிக்கு வந்தவை.
 Actions speak louder than tweets.
Where there’s a will there’s a lawyer.
If you can’t beat ’em, sue ’em.
You can take horse to a Bar but not make it drink beer
A pixel is worth 10 words.
Different keystrokes for different folks.
A stitch in time saves a trip to the dry cleaners – for alterations.
Don’t clone your chickens before they’ve hatched.
If you can’t say something nice about someone, blog about that person instead.
History retweets itself.
Live fat die young.
People who live in glass houses shouldn’t run Windows.
A ‘bama in the land is worth two of the Bush.
One man’s wine is the same man’s poison.
Friends, Romans, and countrymen: lend me your iPhone.
90% of inspiration is googlization.
Google is power.
Ask not what your newspaper can write for you, ask what you can write for your newspaper.
An Englishman’s home is his collateral.
A fool and his mortgage are soon parted.
Where there’s confusion, there’s profit.
An apple a day keeps the doctor away; a garlic a day keeps the dentist away.

August 13, 2013

WORD PLAY -வார்த்தை விளையாட்டு

 அன்புடையீர், 
சிலர் அனுப்பிய பின்னூட்டங்கள் எப்படியோ மாயமாய்ப்   போய்விட்டன. அவர்கள் அன்புடன் மறுபடியும் அனுப்பினால். பிரசுரிக்கிறேன்.
==================================
எலிஸபெத் ராணி
சமீபத்தில் எலிஸபெத் அரசிக்குக் கொள்ளு பேரன் பிறந்த சமயம், அது தொடர்பான ஒரு துணுக்கைப் பதிவில் போடலாம் என்று எண்ணினேன். ஆனால் வேறு பதிவுகள் கியூவில்  முந்திக் கொண்டதால் போடவில்லை.
உடனே போடாததும் ஒரு விதத்தில்  நல்லதாகப் போயிற்று.

FLASHBACK:  1964-ல் ராணிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ( அந்தக் குழந்தை தான்  எட்வர்ட்.) அந்தக் குழந்தை பிறந்தபோது லண்டன் டெய்லி மெயில் தினசரி குழந்தையின் படத்தை வெளியிட்டது.  குழந்தை அழுது கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட படம். படத்திற்கு மெயில் போட்ட தலைப்பு”  HIS CRYNESS!  (HIS ROYAL CRYNESS? - எது  சரி என்று  ஞாபகம் இல்லை.)
இந்த வித்தியாசமான WORDPLAY - யை நான் தினமணி கதிரில் துணுக்காக எழுதினேன்.
*               *                *
சமீபத்தில் அமுல் விளம்பரங்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன், ஏர்- இந்தியா விளம்பரங்களைப் போல் நகைச்சுவையுடன் அவை இருக்கும்.(யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் விளம்பரங்களும் இதே ரகம். ("At United India,it's always U before I.)  என்றாலும், இன்ஷூரன்ஸ் என்ற  வார்த்தையை வைத்துக் கொண்டு அதிகம் விளையாட முடியாது.

ராணிக்குக் கொள்ளு பேரன் பிறந்த சமயம் அமுல் விளம்பரத்தில்
HIS  ROYAL CRYNESS! என்ற வார்த்தையை போட்டு இருந்தார்கள். படத்தைப் பார்க்கவும்.
போனசாக மேலும் சில அமுல் விளம்பரங்களைத் தருகிறேன். இப்போதெல்லாம் அமுல்  விளம்பரங்களில் ‘ஹிங்கிலீஷ்’ அதிகம் இருப்பதால் ஹிந்தி தெரியாதவர்கள் அதிகம் ரசிக்க முடியாது.

August 07, 2013

ஒரு மன்னரின் சவால்



சமீபத்தில் ஒரு பொன்மொழிப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் இருந்தஒருபொன்மொழி:  BE PREPARED TO SHOOT THE KING – FOR I WILL BE THE SOLDIER”  என்று இருந்தது.KING CHRISTAIN  என்ற் ஒரு அரசர் சொன்னது. 
 இது என்ன பெரிய பொன்மொழி, யாரோ ஒரு அரசர் சொன்னதால், அது பொன்மொழி ஆகிவிடுமா? என்று தோன்றியது. பொன்மொழிப் புத்தகத்தில் ஓரளவு விவரங்கள் இருந்தன.. விவரமாகத் தகவல்களை அறிய வலை வீசினேன். 
KING CHRISTAIN- பற்றிய   விவரங்கள் அடங்கிய THE YELLOW STAR என்ற புத்தகம் அகப்பட்டது.  அதை படித்தேன். அதில் இந்த பொன்மொழி தொடர்பான சம்பவம் விவரிக்கப் பட்டு இருந்தது. அதை இங்கு தருகிறேன்.

1940’ம் ஆண்டு. அந்த கால கட்டத்தில் டென்மார்க் நாட்டில், அந்த நாட்டுப் பிரஜைகள் மட்டுமே இருந்தனர். (அதாவது வெளிநாட்டினர் எவரும்  இல்லையாம்) மன்னர் கிங் க்ரிஸ்டியன் ஒவ்வொரு நாளும் குதிரை மீதமர்ந்து கோபன்ஹேகன் நகரை வலம் வருவாராம். எந்த விதமான பாதுகாப்பும் வைத்துக் கொள்ளமாட்டார். மக்களால் அதிகம் நேசிக்கப்படும் மன்னனுக்கு மக்களே பாதுகாப்பு என்பதில் அவருக்குச் சந்தேகமே இல்லை.

August 06, 2013

ஒரு மன்னரின் சவால்


சமீபத்தில் ஒரு பொன்மொழிப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் இருந்த ஒரு பொன்மொழி:  BE PREPARED TO SHOT THE KING – FOR I WILL BE THE SOLDIER.” 
 இது என்ன பெரிய பொன்மொழி, யாரோ ஒரு அரசர் சொன்னதால், அது பொன்மொழி ஆகிவிடுமா? என்று தோன்றியது. பொன்மொழிப் புத்தகத்தில் ஓரளவு விவரங்கள் இருந்தது. விவரமாகத் தகவல்களை அறிய வலை வீசினேன்
KING CHRISTAIN- பற்றிய   விவரங்கள் அடங்கிய THE YELLOW STAR என்ற புத்தகம் அகப்பட்டது.  அதை படித்தேன். அதில் இந்த பொன்மொழி தொடர்பான சம்பவம் விவரிக்கப் பட்டு இருந்தது. அதை இங்கு தருகிறேன்.

1940’ம் ஆண்டு. அந்த கால கட்டத்தில் டென்மார்க் நாட்டில், அந்த நாட்டுப் பிரஜைகள் மட்டுமே இருந்தனர். (அதாவது வெளிநாட்டினர் எவரும்  இல்லையாம்.) மன்னர் கிங் க்ரிஸ்டியன் ஒவ்வொரு நாளும் குதிரை மீதமர்ந்து கோபன்ஹேகன் நகரை வலம் வருவாராம். எந்த விதமான பாதுகாப்பும் வைத்துக் கொள்ளமாட்டார். மக்களால் அதிகம் நேசிக்கப்படும் மன்னனுக்கு மக்களே பாதுகாப்பு என்பதில் அவருக்குச் சந்தேகமே இல்லை.. 

இரண்டாம் உலகப் போர் வேகமாகப் பரவிக்கொண்டிருந்த சமயம். நாஜிப் படைகள் டென்மார்க் எல்லையைச் சூழ்ந்து இருந்தன.
 ஒரு நாள் நாஜிகள் தங்கள் கொடியை அரண்மனை கொடிக் கம்பத்தில் ஏற்றிவிட்டனர். இதற்கு மன்னர் என்ன செய்யப்போகிறார் என்று மக்கள் (பயத்துடன்) கவனித்துக் கொண்டிருந்தார்கள். நகர்வலம் வரும்போது நாஜி கொடியைப் பார்த்த மன்னர், ஒரு சிப்பாயை அனுப்பி அதை இறக்கச் சொன்னார்.
தங்கள் கொடி அகற்றப்பட்டதை மறுநாள் பார்த்த நாஜி ராணுவ அதிகாரி, மன்னரைப் பார்க்கக் கோபத்துடன் வந்தார். “ எங்கள் கொடியை அகற்றியது யார்?” என்று கேட்டார்.”