January 25, 2013

லஞ்சப் பேயே, போ!

இரண்டு ஜார்ஜியாக்கள்!

சில வருஷங்களுக்கு முன்பு நான் அமெரிக்காவில் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள அட்லாண்டா நகருக்குச் சென்றேன். அங்கு சுமார் 6 மாதம் தங்கி இருந்தேன், அட்லான் நகரை ‘செமினார் சிடி’ என்கிறார்கள். வருஷம் முழுதும் ஏதாவது மகாநாடு அங்கு நடந்து கொண்டிருக்குமாம். வருஷத்தில் 1500 மகாநாடுகளுக்கு மேல் நடக்கும் என்று கேள்விப்பட்டேன்!  (இது 1995 தகவல்,) CNN, COCA COLA  நிறுவனங்களின் தலைமை இடமும் அட்லாண்டா தான்,

நான் சென்ற சமயம் அட்லாண்டா நகரில் பல கட்டங்கள்  அசுர வேகத்தில் கட்டப்பட்டு வருவதை கவனித்தேன். அந்த ஆண்டு அங்கு ஒலிம்பிக் போட்டிகள் நடக்க இருந்ததால் பல ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். ஒலிம்பிக் துவங்குவதற்கு  முன்பே நாங்கள் ஊர் திரும்பி விட்டோம்.
அதன் பிறகு சில ஆண்டுகள்  கழித்து அட்லாண்டாவிற்கு நியூ ஜெர்சியிலிருந்து காரில் போனேன். நகருக்குள் நுழையும்  நெடுஞ்சாலையில் பிரம்மாண்ட போர்டு இருந்தது. அதில் எழுதப்பட்டிருந்த வாசகம்:  WE ARE PROUD OF OUR REST ROOMS!"  போர்டை ஒட்டிப் பூத்துக் குலுங்கும் அழகான நந்தவனமும்   புல்தரைகளும். வசதியான பாத்ரூம் அறைகள் கொண்ட அழகான கட்டடமும் இருந்ததது.. சுத்தம் என்றால் சுத்தம்தான். ரம்மியம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்கள் அங்கு போனால் தெரிந்து விடும், அத்தனை  சிறப்பாக இருந்தது. நிச்சயமாக ஜார்ஜியா பெருமை அடித்துக் கொள்ளலாம்!
====

 பின்குறிப்பு 2: அப்படிப் பார்த்தால் இந்தியாவை விட சென்னைக்கு அதிக வசதி இருக்கிறது.  CHENNAI  யில்  A1  ( ஏ-ஒன்!)அப்படியே வருகிறதே!

(யாரங்கே பெருமூச்சு விடுவது?)

ற்றொரு ஜார்ஜியா  நாடு  மார்தட்டிக்கொண்டு 2011-ல் பல  பத்திரிகைகளில் ஒரு விளம்பரத்தைவெளியிட்டிருந்தது.  துருக்கிக்கு அருகில் உள்ள  குட்டி நாடு ஜார்ஜியா.   அந்த விளம்பரத்தை  இங்கு தந்துள்ளேன்.  GEORGIA  என்ற தலைப்பு டிசைன் செய்யப்பட்டிருந்த விதமே வித்தியாசமாக இருந்தது, ‘ I '  எழுத்து 1 மாதிரியும்  சிவப்பு கலரிலும் இருந்தது.'
ஒரு புகழ் பெற்ற நிறுவனம் உலக நாடுகளில் லஞ்சம் எந்தெந்த நாட்டில எந்த அளவு ஏறி உள்ளது அல்லது இறங்கி உள்ளது  என்பதை கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளிட்டிருந்தது. அதில் ஜார்ஜியாவில் அரசு சேவை தொடர்பாக 3சதவிகிதம் பேர் தான் லஞ்சம் கொடுத்தார்கள் என்பதைக்   கண்டறிந்ததாகக் குறிப்பிட்டிருந்தது! 
இது முதல் தர சாதனை. (FIRST CLASS FIRST என்பார்கள்.) எண்ணில் 1, எழுத்தில்  A. அதனால்  GEORGIA வை GEORG 1A என்று போட்டிருந்தார்கள். ( விளம்பரத்தைப் பெரிதாக்கிப் படியுங்கள்!) 
 பபின்குறிப்பு 1: இந்தியாவும் இப்படி   ஒரு விளம்பரம் போட முடியும்.   INDIA வையும்  IND 1 A  என்று எழுதலாமே!

 பின்குறிப்பு 2: அப்படிப் பார்த்தால் இந்தியாவை விட சென்னைக்கு அதிக வசதி இருக்கிறது.  CHENNAI  யில்  A1  ( ஏ-ஒன்!)அப்படியே வருகிறதே!

(யாரங்கே பெருமூச்சு விடுவது?)
 *
Georgia is a sovereign state in the Caucasus region of Eurasia. Located at the crossroads of Western Asia and Eastern Europe, it is bounded to the west by the Black Sea, to the north by Russia, to the south by Turkey and Armenia, and to the southeast by Azerbaijan.

January 14, 2013

தேங்காய், மாங்காய், பட்டாணி, சுண்டல்

கூகுள்ஸ்ரீ!
இன்று பெண்களைப் பிடித்து ஆட்டும் வியாதி:டிவி சீரியல்கள்’ ஆண்களை பிடித்து ஆட்டுவது கம்ப்யூட்டரும் கூகுளும் தான்.
” எப்பப் பார்ததாலும் கம்ப்யூட்டரையும்  கூகுளையும்  கட்டி அழுது கொண்டே இருக்கிறீர்களே, என்னைக் கலியாணம் பண்ணிக் கொண்டதற்குப் பதில் அதுங்களையே  பண்ணிக் கொண்டிருக்கலாம் என்ற குரல் ( அல்லது கூக்குரல்) எல்லார் வீட்டிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

கூகுளும் ஒரு மனைவிதான் என்று ஒரு குறும்பர் ஒரு குறும்புப் பா எழுதி இருக்கிறார்.!




I love this google thing which is just like our dear wife .
We hardly get to complete a sentence in our whole life.

Both google and wife know what really we want to say
And suggest it helpfully as they care for us night and day.
They save our breath, with no strain on our minds, hurray.
++++++++++++++++++++++++++++++

சூழ்நிலை 

சூழ்நிலை   தான் மனிதனையும் மனித குணங்களையும் உருவாக்குகிறது.  படு சீரியஸாக இருக்கும் ஆசாமி கூட சீட்டுக் கோஷ்டியில் இருக்கும் போது அரட்டையும், கூச்சலும் போடத் தயங்குவதில்லை. அவரே மாலையில் காலட்சேபத்தில் உட்கார்ந்திருக்கும் போது காதலாகிக் கசித்து, கண்ணீர்ப் பெருக்கி நிற்கிறார். சீட்டாட்டத்தின்போது ஜோக்கடிக்காமல் இருப்பது நடக்கக் கூடிய காரியமல்ல. எப்பேர்ப்பட்ட முசுடுவும் மாறி விடுவார்

   "என்ன? கொத்தமல்லி பத்து பைசாவுக்கு நாலு தானா? ஐந்து கொடேன்'' என்று பிசுக்காரமாகப் பேரம் பேசும் ஆசாமி, நாகரிக ஓட்டலுக்குப் போகும்போது பத்து அல்லது இருபது ரூபாய்  "டிப்"பாகக் கொடுக்கிறார். இத்தனைக்கும் சர்வர் கேட்பது கூட கிடையாது. இருந்தும் கொடுத்து விடுகிறார், சற்றும் யோசிக்காமல். மாதச் சம்பளம் வாங்கும் ஓட்டல் சர்வர் தன் கடமையைச் செய்கிறார். அவருக்கு "டிப்' கொடுக்கிறோம். பாவம், தோட்டத்தில் தனியாவைப் போட்டு நீர் ஊற்றி, கட்டுக் கட்டி எடுத்து வீடு தேடி வரும் கொத்தமல்லிக்காரியிடம் பேரம் பேசுகிறோம். எல்லாம் சூழ்நிலை வித்தியாசம் தான்!
    இப்படிப் பேரம் பேசும் ஆசாமியைப் பெரிய கிளப்பில் பணம் வைத்துச் சீட்டாடும் போது பார்க்க வேண்டும். ""ஏய், பையா... போய் நாலு பாக்கெட் பிஸ்கெட் வாங்கிக்கிட்டு வாடா'' என்று நூறு ரூபாய் நோட்டை வீசுவார். ஆட்டத்தின் நடுவில், "புது சீட்டுக் கட்டுகள் கொண்டு வா'' என்பார். சீட்டுக்கட்டின் விலைஐம்பது ரூபாய். பத்து ஆட்டத்திற்குப் பிறகு அதையும் மாற்றச் சொல்வார். (ஒரு பெரிய கிளப்பில் சீட்டுக் கட்டுகள் வருடத்தில் சுமார் இருபதாயிரம். முப்பதாயிரம் ரூபாய்க்கு வாங்குகிறார்கள்!) இவரே கிளப்பை விட்டு வரும் போது மாறிவிடுவார். ஆட்டோரிக் ஷாக்காரரிடம் பேரம் பேசுவார். ""என்னய்யா, சாரங்கபாணி தெருவிற்கு ஐம்பது  ரூபா கேட்கிறே? நாற்பது ரூபா தரேன்'' என்பார்.
    தபாலாபீசில் கியூவில் நிற்கும் ஆசாமி கத்துவார்: ""என்ன இது? இன்னும் இரண்டு கவுண்டரைத் திறக்கக் கூடாதா? இவங்களைக் கேட்பவர்கள் யாருமில்லை.'' ஆ னால் இந்த ஆசாமி, தாலுகா ஆபீஸில் ஒரு "சலானி"ல் பணம் கட்ட நான்கு மணி நேரம் காத்திருப்பார். ஒரு பேச்சுப் பேசுவாரா? ஊஹும். அங்கு காத்திருப்பவர்கள்தான் அதிகம். ஆகவே அந்தச் சூழ்நிலையில் இவரும் சாதுவாகிவிடுகிறார்.
------------------------------------------------------------ 


இங்கிலாந்தின் பிரபல கவிஞர் மில்டன் (9 டிசம்பர்1608 – 8 நவம்பர்1674)

சமீபத்தில்  அவரைப் பற்றிய ஒரு  புத்தகம்  வெளியாயிற்று. அந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த   குறிப்பு:

There Is No Poet In English Literature Like Milton : So Firm In Religious Conviction, So Fierce
In Politics, So High In Poetic Flight, So Grand In Style, So Great In Scholarship, So Beautiful In Appearance, So Overbearing In Attitude, So Stoical In Sufferance And All These Are At The Same Time. And All These Varied Facets Of Milton Have Variously Coloured The English Literature. Milton Is The Third Milestone In The History Of English Literature,

The First And The Second Being Chaucer And Shakespeare, Respectively. Therefore, One's Study Of English Literature Will, Certainly, Remain Incomplete So Long As One Is Not Acquainted With Milton's Works.

The Present Book May Be Treated As An Introduction To Milton. In It, All The Three Phases Of Milton's Creative Life Have Been Highlighted : The Phase Of Early Or Minor Poems, The Phase Of Pamphleteering And The Phase Of The Epics And The Lone Drama.

Special Treatments Have Been Accorded To The Poet's Major Works : Paradise Lost, Paradise Regained And Samson Agonistes. 

(துணுக்கு சேதி: 1652 வாக்கில் மில்டன் கண் பார்வையை இழந்தார். அதற்கு  15 வருஷங்களுக்குப் பிறகு அவரது புகழ்பெற்ற  PARADISE LOST  புத்தகம் வெளியாயிற்று!)

பார்வை இழந்த பிறகு,  அது குறித்து மில்டன் எழுதிய கவிதை. 
 On His Blindness
  
WHEN I consider how my light is spent 
  E're half my days, in this dark world and wide, 
  And that one Talent which is death to hide, 
  Lodg'd with me useless, though my Soul more bent 
To serve therewith my Maker, and present         5
  My true account, least he returning chide, 
  Doth God exact day-labour, light deny'd, 
  I fondly ask; But patience to prevent 
That murmur, soon replies, God doth not need 
  Either man's work or his own gifts, who best  10
  Bear his milde yoak, they serve him best, his State 
Is Kingly. Thousands at his bidding speed 
  And post o're Land and Ocean without rest: 
  They also serve who only stand and waite.

January 08, 2013

நான் - நீ- அவன்



 நமது (!) தாளிப்புவின் கொள்கை வாசகம் ( ???): "கொஞ்சம் கல கல: நிறைய வள வள" எனபதைப் படித்திருப்பீர்கள். படிக்காவிட்டாலும் பதிவுகளை பார்த்து உணர்ந்திருப்பீர்கள்! ஆனால் ” உங்கள் வாசகம் தவறு, கொஞ்சம் வள வள; நிறைய கல கல'என்பதுதான் சரி“ என்று இதுவரை யாரும்  சொல்லவில்லை,  இது பற்றி எனக்கு வருத்தமில்லை,  
யாரும் “உங்கள் பிளாக் வள வள இல்லை: எல்லாம் கர கர (ரம்பம்)” என்று சொல்லவில்லையே என்று சந்தோஷம்!

ஒரு வீட்டில்  பெண் (மாலா), நாட்டுப் பெண் (லீலா)இரண்டு பேரும் வாயாடிகள் என்று வைத்துக் கொள்ளுங்கள்  அந்தப் பெண்ணின் அம்மா என்ன சொல்வாள் தெரியுமா? ”மாலா  கல கலன்னு பேசுவாள்: லீலா  ஒரே வள வள!”
என்பாள். சில சமயம் நாட்டுப் பெண்ணின் அம்மாவைப் பற்றி குறிப்பிடும்போது, டயலாக் இப்படி இருக்கும்:  ”“மாலா கல கல, லீலா வள வள. அவளுடய அம்மா லொட லொட” என்பாள்.
ஒரே குணாதிசயத்தை இப்படி படிப்படியாக இறக்கி ( அல்லது ஏற்றி) விவரிப்பதற்கு ஆங்கிலத்தில் emotive conjugations என்பார்கள்.  இது பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்  கண்டு பிடித்த பதப் பிரயோகம் என்று  படித்தேன். அகராதியைப் பார்த்தும் சரியாக விளங்கவிள்லை.

 பி பி சியில் ஒரு பேட்டியின் போது ”Is there any difference between firmness and obstinacy?” என்று கேட்டாராம். ரஸ்ஸல்
I am firm.
You are obstinate. He is pigheaded என்று கூறி விளக்கம் அளித்தாராம்!

........சரி, என் ’வள வள’ இத்துடன் போதும்,. இனி ’கல கல’ emotive conjugations -க்குப்   போகலாம்.

January 02, 2013

அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

சில தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த பதிவு சற்று தாமதமாக வரும்.

-கடுகு