April 24, 2016

ஒரு ஹோட்டலின் கதை

முன் குறிப்பு: நான் டில்லியில் இருந்தபோது வாரத்தில் இரண்டு நாள் அமெரிக்கன் லைப்ரரிக்குப் போய் வருவேன். அங்கு பல புத்தகங்களையும், செய்தித்தாள்களையும் படிப்பேன். ரேடியோ காமெடி ஷோ முதலியவற்றின் விமர்சனங்கள், கதைக் குறிப்புகள் மட்டுமன்றி பல காமெடியன்களின் வாழ்க்கை வரலாறு, நடித்த படங்களின் கதைச் சுருக்கம் ஆகியவற்றையும் படிப்பேன். அதனால் அமெரிக்க நகரங்கள் - முக்கியமாக நியூயார்க் நகரைப் பற்றிய பல தகவல்கள் எனக்குத் தெரிந்தன.
 நியூயார்க் நகரத்தின் Fifth Avenue மிகப் பிரபலமான கடை வீதி.    (அந்த வீதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் காலாற நடந்து போவேன் என்று நான் கனவு கூடக் கண்டதில்லை.) 

WALDORF ASTORIA  என்ற  ஹோட்டல் அந்த பகுதியில்தான் இருக்கிறது.  பல காமெடியன்களின் ஆதர்ச ஹோட்டலாக இருந்தது. அதில் நிகழ்ச்சி நடத்துவதைப் பெரிய கௌரவமாகக் கருதினார்கள். அவர்களுடைய நிகழ்ச்சி நடக்கும் தினங்களில், ஹோட்டல் முகப்பில் மின்சார பல்புகளால் அவர்களின் பெயரைப் பளிச்சிட்டு இருப்பார்கள். காமெடியன்கள் தங்கள் பெயரைப் பார்த்துக் குதித்திருக்கிறார்கள்; மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் மறக்காமல் தங்களது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
          சமீபத்தில், நியூயார்க் நகரில் உள்ள மேடம் டஸ்ஸாட் மெழுகுச்சிலை கண்காட்சிக்குப் போனேன். அப்போது என் பெண் “இங்கிருந்து வெகு அருகில்தான் Waldorf Astoria என்ற பிரம்மாண்டமான ஹோட்டல் இருக்கிறது. ரொம்பப் பழைய காலத்து ஹோட்டல். போய்ப் பார்த்துவிட்டு வரலாமா?” என்று கேட்டாள். “வெளியே இருந்துதான் பார்க்க முடியும். பரவாயில்லை. Waldorf Astoria பற்றி நிறையப் படித்திருக்கிறேன். டஸ்ஸாட் மியூசியத்தைப் பார்த்துவிட்டு, வீட்டுக்குப் போகும்போது அந்த ஹோட்டலைப் பார்த்துக் கொள்ளலாம்” என்று சொன்னேன்.
அப்போது Waldorf Astoria வைப் பற்றிய ஒரு அபாரமான சுவையான வரலாறை  படித்தது நினைவுக்கு வந்தது. அதை இங்கு தருகிறேன்.     

April 15, 2016

கல்யாண மண்டபம்!

கடவுள் கை கொடுத்த கணங்கள்

  சில வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயம். என் பெண்ணின் திருமணம் நிச்சயம் ஆயிற்று. டில்லியிலேயே கல்யாணத்தை நடத்தத் திட்டமிட்டோம். தேதி பிப்ரவரி 5. கல்யாணம் உறுதியான தேதி ஜனவரி 1. ஒரு மாதத்தில் எல்லா ஏற்பாடும் செய்துவிடலாம் என்று எண்ணினோம். துணி மணி, பூமாலைகள், வாழை மரங்கள், சமையல் கான்ட்ராக்டர், திருமண வாத்தியார்கள் எல்லாம் ஏற்பாடு பண்ணிவிட்டோம். கூடவே கல்யாண மண்டப வேட்டையையும் ஆரம்பித்தோம். அங்குதான் எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

  கல்யாண மண்டபங்கள் ஏழு, எட்டு மாதங்களுக்கு முன்பே ‘புக்’ பண்ண வேண்டுமாம். தினமும் ஐந்தாறு மணி நேரம், மண்டபம் மண்டபமாக அலைந்தோம். டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன்   (M C D) மற்றும் டில்லி நகராட்சி (N D M C) பல  கல்யாண மண்டபங்களை (Barat Ghar) கட்டி வாடகைக்குத் தருகின்றன. அவை வசதியானவை; வாடகையும் குறைவானவை. பட்டியல் போட்டுக் கொண்டு எங்கள் வீட்டிலிருந்து அதிக தூரத்தில் இல்லாத மண்டபங்களைத் தேர்ந்தெடுத்து போய் விசாரிக்க ஆரம்பித்தோம்;, எங்கு போனாலும் ஏமாற்றம்தான் மிஞ்சியது.
            நாங்கள் குடியிருந்த காலனியில் இருக்கும் குட்டி மைதானத்தில் ஷாமியானா போட்டுக் கல்யாணத்தை நடத்தலாம் என்று நினைத்தோம். சென்னையிலிருந்து வரும் உறவினர்கள் பிப்ரவரி மாதம் ஷாமியானாவில் குளிரை எப்படித் தாங்குவார்கள்? அதுவும் வயதில் மூத்தவர்கள்?
எங்களைக் கவலை பிடித்துக் கொண்டது. 

April 07, 2016

உயரங்களைத் தொடட்டும் உங்கள் பார்வை

முதலில் சில வார்த்தைகள்.
சமீப ஆண்டுகளில் பொன்மொழிப் புத்தகங்களாகவே படித்து வருகிறேன். அவற்றில் என்னைக் கவர்ந்த பொன்மொழிகளையும் சிலவற்றின் பின்னணியையும் நிறைய நோட்டுப் புத்தகங்களில் எழுதி வருகிறேன். எத்தனை நோட்டுப் புத்தகங்கள் என்ற கணக்கெல்லாம் கூறி ஜம்பமடித்துக் கொள்ளப்போவதில்லை.
 ஒவ்வொரு பொன்மொழியைப் படிக்கும்போதும் ஏராளமான சிந்தனை அலைகளை அது எழுப்பி விடுகிறது. யோசிக்கச் செய்கிறது. ‘பொன்மொழியும் என் மொழியும்’ என்கிற மாதிரி தலைப்பில், சில பொன்மொழிகளைத் தேர்ந்தெடுத்து அவை தொடர்பான சில கருத்துகளை, வாழ்க்கை அனுபவங்களை, வேறு புத்தகங்களில் படித்த தகவல்களை எழுத வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
  சமீபத்தில் WORDS TO LIVE BY என்ற பழைய புத்தகம் - 1959ல் பிரசுரிக்கப்பட்டது – எனக்குக் கிடைத்தது. WILLIAM NICHOLS என்பவர் தொகுத்தது. 99 பிரபலங்கள் எழுதிய, ஒரு பக்கம், ஒன்றரை பக்கக் கட்டுரைகள். அவர்களுக்குப் பிடித்தப் பொன்மொழிகளைத் தேர்ந்தெடுத்து அதை ஒட்டி சில கருத்துகளை எழுதியுள்ளார்கள்.
  அதில் ROGER BANNISTER எழுதிய ஒரு கட்டுரையைத் தமிழ்ப்படுத்தித் தருகிறேன். யார் இந்த ரோஜர்?
உலக சாதனை படைத்தவர். இருந்தாலும் பலர் இவரைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள்; அல்லது மறந்து போயிருப்பார்கள்.


  ஓட்டப்பந்தயத்தில் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடத்திற்குள் ஓடி சாதனை படைத்தவர் ரோஜர். லண்டன்வாசி. இவர் மருத்துவ மாணவராக இருந்தபோது 1954’ம் ஆண்டு இந்த சாதனையைச் செய்தார். சமீபத்தில் அவரது பெயர் பத்திரிகைகளில் இடம் பெற்றது. அது ஒரு சுவையான தகவல். அதைக் கடைசியில் தருகிறேன். முதலில் ரோஜருக்குப் பிடித்த பொன்மொழிக் கட்டுரையைத் தருகிறேன்.